மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது - பிரதமர்
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 11:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளிடம் நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் திட்டங்களின் பலன்களை வழங்குவதே தனது அரசின் முதன்மையான பணியாகும் என்றார். ஒவ்வொரு பெண்ணும், விவசாயிகளும், இளைஞர்களும், ஏழை மக்களும் தனக்கு விஐபிகள் என்றும், அவர்களின் மேம்பாட்டிற்காக தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இதுவரை அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறாதவர்களுக்கு சேவைகளை வழங்கும் சக்திவாய்ந்த ஊடகமாக விகாசித் பாரத் சங்கல்ப் யாத்ரா மாறியுள்ளதாக பிரதமர் கூறினார். ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், நாட்டின் 40 ஆயிரம் பஞ்சாயத்துகள் மற்றும் பல நகரங்களில் உள்ள ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான மக்களை இந்த யாத்திரை சென்றடைந்துள்ளது என மோடி தெரிவித்தார்.

இந்த யாத்திரையில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும், யாத்திரை வாகனத்தை மோடியின் உத்தரவாத வாகனம் (மோடி கி கேரண்டி வாலி காடி) என்றும் அவர் கூறினார். இந்த வாகனங்களை மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.

மோடி கி கியாரண்டி வாலி காடிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாகவும், இதற்காக பல இடங்களில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் வரவேற்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்த வாகனங்கள் மூலம், அந்தமான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் அரசு சேவைகளின் பலன்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய உஜ்வலா இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலும் 35 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஹெல்த் கார்டுகள் இந்த பிரச்சாரத்தின் போது விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நமோ திதி பிரச்சாரத்தின் கீழ் விரைவில் பெண்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

‘ட்ரோன் திதி யோஜனா’ திட்டத்தின் கீழ், 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில், விவசாய நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் தனது உரைக்கு முன், கர்நாடகா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடினார். அப்போது, பயனாளிகள் இந்த யாத்திரை தங்களுக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Tags: Modi's guaranteeIndiaModiprime ministerassembly elections resultfaith in government schemes
Share
Tweet
SendShare
Previous Post

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

Next Post

உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர் இராஜகோபாலாச்சாரியார்! – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies