மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது - பிரதமர்
Apr 29, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளிடம் நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் திட்டங்களின் பலன்களை வழங்குவதே தனது அரசின் முதன்மையான பணியாகும் என்றார். ஒவ்வொரு பெண்ணும், விவசாயிகளும், இளைஞர்களும், ஏழை மக்களும் தனக்கு விஐபிகள் என்றும், அவர்களின் மேம்பாட்டிற்காக தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இதுவரை அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறாதவர்களுக்கு சேவைகளை வழங்கும் சக்திவாய்ந்த ஊடகமாக விகாசித் பாரத் சங்கல்ப் யாத்ரா மாறியுள்ளதாக பிரதமர் கூறினார். ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், நாட்டின் 40 ஆயிரம் பஞ்சாயத்துகள் மற்றும் பல நகரங்களில் உள்ள ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான மக்களை இந்த யாத்திரை சென்றடைந்துள்ளது என மோடி தெரிவித்தார்.

இந்த யாத்திரையில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும், யாத்திரை வாகனத்தை மோடியின் உத்தரவாத வாகனம் (மோடி கி கேரண்டி வாலி காடி) என்றும் அவர் கூறினார். இந்த வாகனங்களை மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.

மோடி கி கியாரண்டி வாலி காடிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாகவும், இதற்காக பல இடங்களில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் வரவேற்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்த வாகனங்கள் மூலம், அந்தமான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் அரசு சேவைகளின் பலன்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய உஜ்வலா இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலும் 35 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஹெல்த் கார்டுகள் இந்த பிரச்சாரத்தின் போது விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நமோ திதி பிரச்சாரத்தின் கீழ் விரைவில் பெண்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

‘ட்ரோன் திதி யோஜனா’ திட்டத்தின் கீழ், 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில், விவசாய நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் தனது உரைக்கு முன், கர்நாடகா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடினார். அப்போது, பயனாளிகள் இந்த யாத்திரை தங்களுக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Tags: Modi's guaranteeIndiaModiprime ministerassembly elections resultfaith in government schemes
ShareTweetSendShare
Previous Post

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

Next Post

உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர் இராஜகோபாலாச்சாரியார்! – அண்ணாமலை

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies