காங்கிரஸ் எம்.பி.யிடம் ரூ.300 கோடி பறிமுதல்: ராகுல் பதிலளிக்க நட்டா வலியுறுத்தல்!
Apr 29, 2026, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.யிடம் ரூ.300 கோடி பறிமுதல்: ராகுல் பதிலளிக்க நட்டா வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டிருக்கும் 300 கோடி ரூபாய் குறித்து ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தீரஜ் சாஹூ. மிகப்பெரிய அளவில் மதுபான ஆலை நட்த்திவருகிறார். இவர், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமாக ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வரும் என்று கூறியிருந்தார். அதேபோல, காங்கிரஸ் எம்.பி.யின் ஊழலை கண்டித்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம், மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் மட்டும் பெயரளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் வெகுஜனங்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும்.

ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப் பெறப்படும். நீங்களும் உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IT raidJ.P.NaddaCongress MP300 crores
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் – அகமதாபாத் முதல் மும்பை வரை 2.07 மணி நேரத்தில் கடக்கும்!

Next Post

பாரதியாரின் சுதந்திர போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies