காங்கிரஸ் எம்.பி.யிடம் ரூ.300 கோடி பறிமுதல்: ராகுல் பதிலளிக்க நட்டா வலியுறுத்தல்!
Sep 13, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.யிடம் ரூ.300 கோடி பறிமுதல்: ராகுல் பதிலளிக்க நட்டா வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 04:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டிருக்கும் 300 கோடி ரூபாய் குறித்து ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தீரஜ் சாஹூ. மிகப்பெரிய அளவில் மதுபான ஆலை நட்த்திவருகிறார். இவர், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமாக ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வரும் என்று கூறியிருந்தார். அதேபோல, காங்கிரஸ் எம்.பி.யின் ஊழலை கண்டித்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம், மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் மட்டும் பெயரளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் வெகுஜனங்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும்.

ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப் பெறப்படும். நீங்களும் உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IT raidJ.P.NaddaCongress MP300 crores
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் – அகமதாபாத் முதல் மும்பை வரை 2.07 மணி நேரத்தில் கடக்கும்!

Next Post

பாரதியாரின் சுதந்திர போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies