ஷாஹி ஈத்கா விவகாரம்: ஆய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷாஹி ஈத்கா விவகாரம்: ஆய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்திலுள்ள அயோத்தியில் இராமர் பிறந்த இடமான இராமஜென்ம பூமி இருப்பதுபோல, மதுராவில் கடவுள் கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண ஜென்மபூமி அமைந்திருக்கிறது.

அயோத்தியைப் போலவே இந்த நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. காரணம், இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் ஈத்கா என்ற மசூதி அமைந்திருக்கிறது. இது முகலாய ஆட்சியின்போது கிருஷ்ணர் கோவிலை இடித்துவிட்டு, இந்த மசூதி கட்டப்பட்டதாக நீண்ட காலமாகவே சர்ச்சை நிலவி வருகிறது.

இதனிடையே, கடந்த 1968-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் ஈத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, சர்ச்சைக்குரிய நிலத்தில் 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.

எனினும், மொத்த நிலவும் கோவிலுக்குச் சொந்தமானது என்று ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, இவ்வழக்குகள் அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மசூதி இடத்தில் கள ஆய்வு செய்வதற்கு உத்தரவிடக் கோரி, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த மதுரா நீதிமன்றம், கள ஆய்வு நடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றமும் கள ஆய்வு நடத்த அனுமதி அளித்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கில், கள ஆய்வு செய்வதற்கு தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேபோல, மதுரா விவகாரத்திலும் நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அட்வகேட் கமிஷனர் தலைமையில் கள ஆய்வு நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அட்வகேட் கமிஷனர் நியமனம் மற்றும் மற்ற நடைமுறைகள் தொடர்பாக வரும் 18-ம் தேதி விரிவாக அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாகத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது. மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டது.

Tags: supreme courtDismissMaduraKrishana jenmaboomiMosque plea
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு!

Next Post

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies