சிக்கலில் அமைச்சர் சிவசங்கர்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கலில் அமைச்சர் சிவசங்கர்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 07:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரம்பலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு குவாரிக்கு தலா ரூ.2 கோடி என 31 கல் குவாரிகளுக்கான ஏலம் தொடர்பாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் டெண்டர் பெட்டி வைக்கப்பட்டது. ஆனால், செங்குணம், திருவளக்குறிச்சி உள்ளிட்ட 21 குவாரிகளை, திமுக எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆகியோர், அதிகாரிகள் துணையோடு அதனை பிளாக் செய்து இருந்தனர்.

இதனால், குவாரியை ஏலம் எடுக்க விரும்புபவர்களிடம், கட்சி நிதியாக 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இது தவிர, அரசுக்குக்கு கட்ட வேண்டிய ஒப்பந்தப்புள்ளி தொகையை, டி.டி-யாக எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி முருகேசன் உள்ளிட்டோர் கல்குவாரி ஏலம் எடுக்க பெட்டியில் விண்ணப்பம் போட சென்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரன் உதவியாளர் மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனின் பி.ஏ. சிவசங்கர் உள்ளிட்டோர் விண்ணப்பத்தைப் பறித்துக் கிழித்தெறிந்ததோடு, கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலுவலத்தில் உள்ள பொருட்களை சூறையாடினர். இதில், தப்பியோடிய பாஜக நிர்வாகி முருகேசனின் பேண்டை உருவிவிட்டு, போலீசார் முன்னிலையில் தாக்கினர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள், பெண் அலுவலர்கள் கதவைச் சாத்திக் கொண்டனர். இதனால், கலெக்டர் அலுவலகமே போர்க்களமாக காட்சியளித்தது.

திமுகவினரின் இந்த கொலை தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீசார், குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு சாதாரண நபர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், புதுடெல்லியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டரை சந்தித்து பெரம்பலூர் கல்குவாரி ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், இதுவரையில் வன்முறையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யாத மாவட்ட காவல்துறையினரின் அலட்சியப் போக்கை கண்டித்தும் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இதனால், அமைச்சர் சிவசங்கர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் அவரது உதவியாளர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Perambalurminister sivasankarGeological and Mining Department21 quarriesBJP Kaulpalayam panchayat council president Kalaichelvan
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு சம்பவம் : புதிய தகவல்!

Next Post

“ஒன்றிய அரசு” என மாற்றக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies