குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!
Apr 29, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன.

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடவரம்பன்கரை பகுதியில் உள்ள மேற்கு கடற்கரை சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொது போக்குவரத்து நேற்று இரவு வரை நிறுத்தப்பட்டது. தற்போது தண்ணீரின் அளவு குறைந்து உள்ளதால் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி சென்று வருகின்றன.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி பரிதவித்து வந்தனர். இதோடு மட்டுமல்லாமல் பிரதான சாலைகளும் தண்ணீரில் மூழ்கி பொது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதன் ஒரு பகுதியாக குமரி – கேரளா கடற்கரை மார்க்கமாக இணைக்கும் மேற்கு கடற்கரை சாலையில் நடவரம்பன்கரை பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த சாலை மார்க்கமாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அளவும் குறைக்கப்பட்டது.

இதனால் ஆற்றின் கரைபுரண்டு ஓடிய தண்ணீரின் அளவு குறையத் துவங்கியது. இதனை தொடர்ந்து இந்த சாலையில் தேங்கி நின்ற தண்ணீரின் அளவு சற்று குறைத்துள்ளது.

இதனையடுத்து இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்று வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

ஆற்றின் நீர்மட்டம் முழுமையாக குறைந்தால் மட்டுமே இந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் குறையும் அதுவரை வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி தான் செல்ல வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags: floodkanyakumari
ShareTweetSendShare
Previous Post

அரியானாவில் லேசான நிலநடுக்கம்!

Next Post

சென்னை – தூத்துக்குடி விமான சேவை: இயல்பு நிலைக்கு திரும்பியது

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies