தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடமளிக்கக் கூடாது: ஜெய்சங்கர்!
Jul 30, 2026, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடமளிக்கக் கூடாது: ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் நிலையில், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் நெவார்க் நகரில் உள்ள இந்துக்களின் சுவாமி நாராயண் கோவில் சுவற்றில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் ஸ்பிரே பெயின்ட் மூலம் எழுதப்பட்டிருந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.

இதை இந்து அமெரிக்கன் அறக்கட்டளை புகைப்படம் எடுத்து, தங்களது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதையடுத்து, இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அப்பதிவில், “கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் இந்து கோவில் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு காரணமானவர்களை கண்டறியும் நோக்கில் நெவார்க் காவல் துறையின் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்க கோவில் சுவரில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எழுதிய எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சக்திகளுக்கும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கும் இடமளிக்கக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் சார்பில் அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

Tags: americaHindu Templekhalistan
ShareTweetSendShare
Previous Post

இராமேஸ்வரம்: கடலில் எரிந்து நாசமான படகு!

Next Post

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies