அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!
Jul 29, 2026, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஃப்-16 போர் விமானங்கள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள, தென் சீனக்கடல் பகுதி, சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் தமக்கே உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, தென் சீனக்கடல் பகுதி வழியாக நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக கூறப்படுவதாலும், இதற்கு பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

சமீப காலமாக தென் சீனக் கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து எச்சரித்துள்ளார். சீனாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல், பிலிப்பைன்ஸ் தனது பாதுகாப்பிற்காக எந்த வெளி நாட்டையும் நம்பக்கூடாது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, எஃப்-16 போர் விமானங்கள் குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் ரோமுவால்டெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நமது நாடு வான்வெளி பாதுகாப்பில் உறுதியாக உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து எஃப்-16 போர் விமானம் வாங்குவது குறித்து நீண்ட நாட்களாக விவாதித்து வருகிறோம். வான் மற்றும் தரைத் தாக்குதல் ஆகிய இரண்டையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட எஃப்-16 போர் விமானம் நமக்கு தேவை என்று கூறினார்.

Tags: f16The Philippines buys fighter jets from the United States: increasing war tension!
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் அணிகளுக்கு உரிமையாளர்களான நடிகர்கள்!

Next Post

அணுசக்தி மூலம் இயங்கும் கப்பலில் தீ விபத்து! – ரஷ்யாவில் பதற்றம்

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies