பிரதமர் மோடிக்கு மாற்று யாருமே இல்லை: அஜித் பவார்!
Sep 13, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு மாற்று யாருமே இல்லை: அஜித் பவார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாருமே இல்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியிருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராகப் பதவி வகித்தார்.

இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா உடைந்து, 40 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. இந்த சூழலில், சரத் பவாருக்குப் பிறகு கட்சியின் தலைவர் யார் என்பதில் அஜித் பவாருக்கும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறிய அஜித் பவார் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார். இதையடுத்து, அவருக்கு மீண்டும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவாரிடம், 2024 தேர்தலில் எதிர்கட்சிகளின் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஜித் பவார், “தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாரும் இல்லை.

பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது போன்ற முடிவானது, ஓரிரு விஷயங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்படாது. பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அனைவரும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.

ஆனால், நாட்டின் நலன்களை பாதுகாப்பது யார்? நாடு யாருடைய கைகளில் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும்? சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தியது யார்? என்பது போன்ற அம்சங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில், பிரதமர் மோடிதான் நாட்டு மக்களின் தேர்வாக இருப்பார்” என்றார்.

Tags: PM ModiPraisedAjit PawarNo Alternate
Share
Tweet
SendShare
Previous Post

ஊக்கமருந்து குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட டென்னிஸ் வீராங்கனை!

Next Post

பொங்கல் போட்டியில் இணையும் மற்றொரு படம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies