ஹௌதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
Jul 30, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 10 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்த ஏவிய டிரோன் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்காவின் F-18 போர் விமானம் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

தவிர, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதல் 80 நாட்களைக் கடந்து இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரத்தின் பெரும்பகுதி உருக்குலைந்து கிடக்கிறது.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 20,000-த்தை தாண்டி இருக்கிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கையோ 40,000-க்கும் மேல். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், சுரங்கப் பாதைகள், முக்கியத் தீவிரவாத முகாம்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இப்போரை நிறுத்த உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா.வும் தீர்மானம் நிறைவேற்றிப் பார்த்தது. ஆனால், யார் சொல்வதையும் கேட்க இஸ்ரேல் தயாராக இல்லை. ஹமாஸ் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கும்வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எனவே, செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை நிலை நிறுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இவற்றை அமெரிக்க இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தி இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். இதையடுத்து, அமெரிக்க இராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், 10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், 3 கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2 தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

Tags: americaIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் இரவிலும் ஒளிரும் அலங்கார தூண்கள்!

Next Post

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது – யுவராஜ் சிங்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies