அயோத்தியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட "ரோடு ஷோ"!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட “ரோடு ஷோ”!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 01:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியை வந்தடைந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து இரயில் நிலையம் வரை 15 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மலர்தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றார். அயோத்தி விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமருக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், இரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உள்ளூா் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து அயோத்தி தாம் இரயில் நிலையம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகப்பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினர். அப்போது, சாலையின் இரு புறமும் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு பல்வேறு வடிவங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

‘புண்ணிய நகரான அயோத்திக்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. மேலும், பிரதமர் மோடி படம் பொறித்த பிரம்மாண்டமான பேனர்களும், கட் அவுட்களும் 15 கி.மீ. தொலைவுக்கும் நிறைந்திருந்தன. பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் சுமார் 1.5 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.

சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள், மலர்தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதோடு, மோடியை உற்சாகப்படுத்தும் வகையில் 40 இடங்களில் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 2,000 நடனக் கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இதைக் கண்ட பிரதமர் மோடி, தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர், மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி பிரதமர் மோடி வாகனம் புதிய இரயில் நிலையத்துக்கு சென்றடைந்தது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரமதர் மோடி கலந்துகொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags: PM ModiAyodyaRoad Show
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல நகை கடையில் 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை!

Next Post

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies