நன்னீராக மாறிய கடல் நீர் - மீனவர்கள் வேதனை!
Jun 13, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நன்னீராக மாறிய கடல் நீர் – மீனவர்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதீத கன கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள கருங்குளம், கோரம்பள்ளம் கண்மாய், கடம்பக்குளம், தூதுகுழி மேலக்குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

குளங்கள், கண்மாய்களை திமுக அரசு முறையாக தூர்வாராததால், கரைகள் உடைந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாக புகார் எழுந்தது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தை சூழ்ந்த மழை வெள்ளம் வடக்கு திரேஸ்புரம், விவேகானந்தர் நகர், கரைவலை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சூழ்ந்தது. இதனால், அந்த பகுதியே வெள்ளத்தில் தத்தளித்தது. லட்சக்கணக்கான மதிப்பிலான மீன்பிடி வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், அங்கிருந்த 93 மீனவ குடும்பத்தினர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள, தங்களது வீடுகளை விட்டுவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

வெள்ளம் கடலில் கலப்பதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளையும் திமுக அரசு முறையாகவும், உடனடியாகவும் செய்யாததால், மீனவர்களே வாய்க்காலை வெட்டி கடலுக்குள் வெள்ளம் வடிந்து செல்ல வழி வகை செய்தனர்.

இதனிடையே, கடல் நீர் உவர்ப்பு சுவையில் இருந்து நல்ல தண்ணீராக மாறியுள்ளது. இதனால், மீன்களின் வருகை குறைந்துள்ளது. இதனால், கடந்த 14 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாகவும், வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags: raintuticorinsea waterwaterissuefishermen families
ShareTweetSendShare
Previous Post

ஏற்காட்டில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார் எல்.முருகன்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies