அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் : விளக்கம் கேட்ட ஆளுநர்!
Jul 30, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் : விளக்கம் கேட்ட ஆளுநர்!

உரிய விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சருக்கு பாஜக கடிதம்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அம்மாநில உள்துறை செயலர் மற்றம் டிஜிபிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்த சென்றனர். அப்போது வீட்டுக்கு முன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அமலாக்கத்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கு மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது கொடூரமான சம்பவம் என தெரிவித்துள்ள அவர், ஜனநாயகத்தில் காட்டுமிராண்டித்தனம் மற்றும் காழ்ப்புணர்ச்சியை தடுப்பது ஒரு நாகரீக அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.ஒரு அரசாங்கம் அதன் அடிப்படைக் கடமையில் இருந்து தவறினால், இந்திய அரசியலமைப்பு தன் கடைமையை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: west bengalED Team AttackedGovernor CV Ananda BoseHome Secretary summoneddgp summomned
ShareTweetSendShare
Previous Post

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா பந்துவீச்சு!

Next Post

பிரதமருக்கு நன்றி கூறிய ராம் பஜனை பாடகர் !

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies