செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!
Jun 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியான கொங்கு மெஸ் மணி என்பவருக்குச் சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சட்ட விரோத பண மாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரின் வீடு, அலுவலகம், மற்றும் அவரது ஆதரவாளார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் உள்ளிட்டோர் கடந்த மே மாதம் முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், கரூரில் 10-ம் தேதி புதன்கிழமை மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான கோவை ரோட்டில் உள்ள உணவகத்திலும், கோடங்கிபட்டியில் உள்ள அவரது தோட்டத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு சோதனை வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது, கோவையிலிருந்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றுள்ளனர். அதில், சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும், கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது வரை அவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். வழக்கமாக, ரெய்டு என்றால், அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு சம்பந்தப்பட்ட நபர் வீடு அல்லது அலுவலகத்திற்கு சென்றுவிடுவர். ஆனால், தற்போது, மாலையில் சென்றுள்ளனர். இதனால்தான் பலரும் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள், அதாவது ஜனவரி 12 -ம் தேதி, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: IT raidit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

Next Post

உலக இந்தி தினம் இன்று!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies