செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் புகுந்த ஐ.டி. அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியான கொங்கு மெஸ் மணி என்பவருக்குச் சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சட்ட விரோத பண மாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரின் வீடு, அலுவலகம், மற்றும் அவரது ஆதரவாளார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான வீடுகள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் உள்ளிட்டோர் கடந்த மே மாதம் முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், கரூரில் 10-ம் தேதி புதன்கிழமை மாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான கோவை ரோட்டில் உள்ள உணவகத்திலும், கோடங்கிபட்டியில் உள்ள அவரது தோட்டத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு சோதனை வருகின்றனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது, கோவையிலிருந்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றுள்ளனர். அதில், சொத்து மதிப்பீட்டுக் குழுவினர் 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும், கொங்கு மெஸ் மணிக்கு சொந்தமான உணவகம் மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது வரை அவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். வழக்கமாக, ரெய்டு என்றால், அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு சம்பந்தப்பட்ட நபர் வீடு அல்லது அலுவலகத்திற்கு சென்றுவிடுவர். ஆனால், தற்போது, மாலையில் சென்றுள்ளனர். இதனால்தான் பலரும் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை மறுநாள், அதாவது ஜனவரி 12 -ம் தேதி, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: IT raidit raids senthil balaji
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

Next Post

உலக இந்தி தினம் இன்று!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies