மத்திய அரசு நிதி எவ்வளவு செலவிடப்படுகிறது? கணக்குக் கேட்ட ஆளுநர்... கலக்கத்தில் தி.மு.க.!
Sep 20, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு நிதி எவ்வளவு செலவிடப்படுகிறது? கணக்குக் கேட்ட ஆளுநர்… கலக்கத்தில் தி.மு.க.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்துக்கான மத்திய அரசு நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது? என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருப்பதாகவும், இதற்கு தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசு நிதியை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் குறிப்பிட்ட தொகையை தமிழக அரசும் செலவிட வேண்டும் என்பது நடைமுறை.

அதேசமயம், தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை. இதனால், தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார்கள். எனினும், தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது.

அந்த வகையில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் தி.மு.க. அரசு குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் அமைச்சர்கள் பலரும் பதில் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பு என்ன என்பது குறித்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் பட்டியல் தயார் செய்து அனுப்புமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இக்கடிதம் ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் மூலம் தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் குமார் மீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஆளுநர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்புமாறு துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தகவல்களை திரட்டும் பணியில் துறைச் செயலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுகுறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கும்போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறதா? என்கிற விவரம் தெரியவரும்.

மேலும், மத்திய அரசு மீது தமிழக அரசு கூறும் புகார் குறித்த உண்மைத்தன்மையும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஏற்கெனவே பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்ட தொகை பற்றி கணக்குக் கேட்டதாகவும், எனவே இந்த விவரங்களை தெரிந்துகொள்ள கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags: Governor R.N.RaviCentral Government Fundasked details
Share
Tweet
SendShare
Previous Post

தொழில்முனைவோர் கொள்கை கட்டமைப்பு, ஸ்டார்ட்அப் சூழல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்! – ஆளுநர் ஆர். என். ரவி அறிவுறுத்தல்!

Next Post

அயோத்தி: 6 மொழியில் சிறப்பு வானிலை இணையதளம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies