நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்! - கஜேந்திர சிங் செகாவத்
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்! – கஜேந்திர சிங் செகாவத்

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுகளை அகற்றி சுத்தப்படுத்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், இதற்கு நமாமி கங்கா திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தொலை நோக்குத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கம் “நீர் தொலைநோக்குப் பார்வை 2047 – முன்னோக்கிய பயணம்” என்ற தலைப்பில் அகில இந்திய செயலாளர்கள் மாநாட்டை இன்று மாமல்லபுரத்தில் தொடங்கிவைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கூடத்தில் பேசிய மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்,

நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலைப் பின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மை நிலை, நீர்ப் பயன்பாட்டுத் திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்பு ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

மறுசுழற்சி மூலம் தண்ணீரை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், இந்தியா முழுவதும் உள்ள நிலத்தடி நீர் பரப்பளவு 25 லட்சம் சதுர கிலோ மீட்டர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 சதவீதம் குறைந்துள்ளதைக் கண்டறிந்து, மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் தற்போது இது 10 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது  என்றார்.

நீர்வள மேலாண்மையில் நீடித்த கொள்கையை வகுக்க, மத்திய-மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து திட்டமிட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

நிலத்தடி நீரை உயர்த்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.  விவசாயத்தில் தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துப் பற்றாக்குறையைப் போக்க நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனகூறினார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத் துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நீர்த் துறையில் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் வெற்றிகரமான திட்டங்களை எடுத்துரைப்பதற்கும், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியகங்கள் மற்றும் நீர்த் துறையில் பணிபுரியும் பிற பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கும் இந்த மாநாடு ஒரு தளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும்! – மத்திய அமைச்சர் வி கே சிங்

Next Post

தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு! – அண்ணாமலை கண்டனம்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies