இந்தியாவின் எதிர்காலத்திற்கு இராமரின் இலட்சியங்களே அடிப்படை: பிரதமர் மோடி!
Jul 22, 2026, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் எதிர்காலத்திற்கு இராமரின் இலட்சியங்களே அடிப்படை: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதையொட்டி, பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

அக்கடிதத்தில் பிரதமர் மோடி, “பிரம்மாண்ட இராமர் கோவில் வெற்றி, வளர்ச்சியின் புதிய மாதிரிகளை உருவாக்க தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “PM JANMAN போன்ற பல்வேறு பிரச்சாரங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இராமரின் ஒப்பந்தங்கள் ஏழைகளின் நலனுக்காகவும், அதிகாரமளிக்கவும் உழைக்க நமக்கு நிலையான ஆற்றலைத் தருகின்றன.

இராமர் சப்கா சாத், சப்கா சாத், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிராயஸ் (அனைவரின் ஆதரவு, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி) ஆகியவற்றின் உத்வேகத்தை அளித்திருக்கிறார். இந்த மந்திரத்தின் பலன்கள் இன்று எங்கும் காணப்படுகிறது. கடந்த ஒரு தசாப்தத்தில் நாடு சுமார் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை அயோத்தி தாமில் கண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiPresident Droupadi Murmuletter
ShareTweetSendShare
Previous Post

மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்துகிறது!

Next Post

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies