3 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்
Aug 8, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 02:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டினார். தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், “தற்போது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். நமது கலாச்சாரம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. யோகா போன்ற நமது நடைமுறைகளை பின்பற்றும் நாடுகளுக்கு நாம் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறோம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விட இந்தியாவின் பரிவர்த்தனை அதிகம். கடந்த பத்தாண்டுகளில், பின்தங்கியவர்களுக்கு 100 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 500 மில்லியன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், 110 மில்லியன் விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று முறை நேரடியாகப் பணம் பெறுகின்றனர். நாம் பாரபட்சம், சொந்த பந்தம், ஊழலைத் தாண்டிவிட்டோம். தற்போது அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது.

நாம் விக்ராந்த் போன்ற போர்க்கப்பல்களை உற்பத்தி செய்கிறோம். மேலும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம். இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்கால சிற்பிகளாக உள்ளனர். வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாடு மிகச் சிறந்த நிலையில் இருக்கும் என்று கூறினார்.

Tags: Vice president of india
Share
Tweet
SendShare
Previous Post

ஊட்டி போறீங்களா! : வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Next Post

பொன்முடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies