பக்தர் மண்டை உடைப்பு - பழநியில் பரபரப்பு!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பக்தர் மண்டை உடைப்பு – பழநியில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவில் பழநி முருகன் கோவில் ஆகும்.இங்குள்ள முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது. சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது.

நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான மூலிகை பொருட்களின் கலவையாகும். இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த பழநி மலை முருகன் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், பழநி மலைக் கோவிலுக்கு ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி இருந்தது.

இந்த வழியில் எடப்பாடி பக்தர்களும் முந்தியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனை கோவில் பாதுகாவலர்கள் தடுத்தனர். அப்போது, எடப்பாடியைச் சேர்ந்த சந்திரன் என்பவரைத் தடுத்துள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு உருவானது. கடைசியில் பக்தர் சந்திரனின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரன் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி சேர்ந்த பக்தர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், பக்தர்களைத் தாக்கிய பாதுகாவலர்களை இடைநீக்கம் செய்வதாகக் கோவில் உதவி ஆணையர் லட்சுமி உறுதியளித்தார். அதன்பேரில், ஒரு பிரிவினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Tags: Palani Murugan temple
Share
Tweet
SendShare
Previous Post

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது!- குடியரசுத் தலைவர்

Next Post

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயண சலுகை அட்டை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies