ஜாக்டோ - ஜியோ போராட்டம் - முடங்கும் தமிழக அரசு?
Aug 19, 2026, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாக்டோ – ஜியோ போராட்டம் – முடங்கும் தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாகப் பெற்று வந்த சரண் விடுப்பையும் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும், இது திமுக தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு ஊழியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குகிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் போராட்டம் அறிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிப்ரவரி 26 -ம் தேதி முதல் ஜாக்டோ – ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அவ்வாறு நடைபெற்றால், தமிழக அரசு செயல்படாமல் முடங்கும் நிலை ஏற்படும். இதனால், பொது மக்கள் பெரிதும் அவதிப்பட நேரிடும்.

Tags: jacto jeo
Share
Tweet
SendShare
Previous Post

மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் திமுக அரசியல் செய்துகொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் – மருமகளுக்கு ஜாமீன் கிடைத்ததா? – நடந்தது என்ன?

Related News

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies