தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் - மருமகளுக்கு ஜாமீன் கிடைத்ததா? - நடந்தது என்ன?
Jun 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் – மருமகளுக்கு ஜாமீன் கிடைத்ததா? – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோரது ஜாமீன் மனு 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ, மருமகள் மெர்லின் ஆகியோர், உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரேகா என்பவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கடந்த 8 மாத காலமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

இதுகுறித்து புகாரின் பேரில், காவல்துறையினர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை பிணை கொடுக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி செலவினை ஏற்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த மதுரை எவிடென்ஸ் கதிர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, தங்களுக்கு ஜாமீன் கோரி, சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து, ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கும்படி காவல்துறைக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 2-ம் தேதிக்கு தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags: dmk failsdmk mlaDMK Legislator's son-daughter-in-law got bail? - what happened?
ShareTweetSendShare
Previous Post

ஜாக்டோ – ஜியோ போராட்டம் – முடங்கும் தமிழக அரசு?

Next Post

வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies