இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும்! - அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும்! – அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 5, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

இந்த அதிகாரிகள் இந்திய சிவில் கணக்குப் பணி, இந்தியப் பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய பி & டி (நிதி மற்றும் கணக்கு) பணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், 

சிறந்த அரசு நிதி முகாமைத்துவ முறைமையே நல்லாட்சியின் அடிப்படை என்பது அனைவரும் அறிந்த உண்மை எனக் குறிப்பிட்டார்.

நிர்வாகத்தில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இவர்கள் நிர்வாகத்தில் நேர்மை மற்றும் விவேகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இவர்கள் தங்கள் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடு டிஜிட்டல் மாற்றத்தைச் சந்தித்து வரும் நேரத்தில், அதிகாரிகள் பணியில் இணைந்துள்ளதாகக் கூறினார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஏற்படுத்தும் அதே வேளையில், சேவைகளை வழங்குவதில் அதிகச் செயல்திறன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய, அரசுத் துறைகள் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும், நிர்வாக முறையை மக்களை மையமாகக் கொண்டதாகவும், திறமையானதாகவும், வெளிப்படையாகவும் மாற்றுவது அவசியமாகும்.

நிதி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகபட்சமாக்குவது மட்டுமல்லாமல், கொள்கை மாற்றங்களின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்வது, நிதி மேலாண்மை அமைப்புகள் உட்பட பல்வேறு நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை முன்மொழிவது ஆகியவை அவர்களின் வேலை என்று அவர் கூறினார்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள எப்போதும் மாறிவரும் மற்றும் முன்னேறும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப வேகத்தை வைத்திருக்குமாறு அவர்களை அறிவுறுத்தினார்.

சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதும், நமது கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகளை தடையற்றதாக மாற்றுவதும் அவர்களின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags: President Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் பதவியேற்க அனுமதி மறுப்பு!

Next Post

திமுகவுக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies