ரூ. 4 அரைக் கோடி மோசடி- வங்கி தலைவர் உள்ளிட்டோருக்கு காப்பு
Jul 29, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 4 அரைக் கோடி மோசடி- வங்கி தலைவர் உள்ளிட்டோருக்கு காப்பு

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரு.4 கோடியே 50 லட்சம் கையாடல் செய்த வங்கி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊழியர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி அருகே உள்ளது சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். கடந்த 22.04.2015 -ம் தேதி முதல் 4.06.2021 வரையிலான நாட்களில், போலியான நிரந்தர வைப்பு ரசீது மூலம் பல்வேறு நபர்களிடம் நிரந்தர வைப்பு தொகையினைப் பெற்று அத்தொகையினை சங்க கணக்கிற்குக் கொண்டு வராமல் கையாடல் செய்துள்ளதாக வங்கி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 11 பேர் புகார் எழுந்தது.

மேலும், பல்வேறு நகை கடன்தாரர்களுக்கு அதிகமான தொகை வழங்கியதாக பொய்கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளனர். அத்துடன், நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்குப் பல்வேறு நபர்களின் பெயரில் போலியான நகைக்கடன் வழங்கியதாகப் பொய்கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இப்படி, ரூ.4,50,60,652 ரொக்கம் கையாடல் செய்துப்பட்டுள்ளதாக, சங்க செயலாளர் சையத் சாதிக்பாஷா , முதுநிலை எழுத்தர் பசுமலை , சிற்றெழுத்தர் முருகன், விற்பனையாளர் விஜயராஜ், நிர்வாகக் குழுத்தலைவர் சாந்தி, நிர்வாகக் குழுத்தலைவர் அருள்மேரி மற்றும் 11 நிர்வாகச் சங்க உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டி திண்டிவனம் துணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி விழுப்புரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கடந்த 7 -ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கையாடலில் சம்மந்தப்பட்ட பசுமலை, முருகன், விஜயராஜ், சாந்தி, அருள்மேரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags: Rs. 4 Half Crore Fraud
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : இன்றையப் போட்டிகள் விவரம்!

Next Post

வடிவுடையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்! – விழாக் கோலம் பூண்ட குத்தாலம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies