தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!
Aug 19, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்நிலையில், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதால் சுமார் 2 நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இந்நிலையில் ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது குறித்தும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளளதாவது:

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக அரசிடம் இருந்து வரைவு ஆளுநர் உரை  பெறப்பட்டது. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில், ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

கவர்னரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். கவர்னரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் அவையில் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து

திருக்குறளையும் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு, உண்மைக்கு மாறான தவறான கூற்றுக்கள் கொண்ட உரையை படிக்க முடியாத இயலாமையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படுத்தினார். அவைக்கு மரியாதை தெரிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறி அவர் தனது உரையை முடித்தார்.

பின்னர் சபாநாயகர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். ஆளுநர் உரை முடியும் வரை ஆர்.என்.ரவி அங்கேயே அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார்.

இருப்பினும், சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக ஒரு அவதூறைத் தொடங்கினார். அவரை நாதுராம் கோட்சே உள்ளிட்டோரை பின்பற்றுபவர் என்று கூறினார்.

சபாநாயகர் தனது தகாத நடத்தையால் தனது நாற்காலியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்தார். சபாநாயகரின் செயலால் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

Tags: tamilnadu assembelytamilnaduRN RaviMK Stalintamilnadu governor
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசில் ஆட்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் வெளிப்படையானது! – பிரதமர் மோடி

Next Post

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்கள்!

Related News

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

பால் கொள்முதல் விலை உயர்வு, எம்எல்ஏக்களுக்கு கார் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies