அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு - தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்
Jul 29, 2026, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு – தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட அரபிக் கல்லுாரி பேராசியர் சையது அப்துல் ரகுமான் உமரி மற்றும் முன்னாள் மாணவர்கள் முகமது உசேன் பைசி, இர்ஷாத் மற்றும் ஜமீல் பாஷா உம‌ர் ஆகியோரை கைது செய் துள்ளது தேசிய புலனாய்வு முகமை. தமிழக மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், ஒரு ஊருக்கு ஐந்து பேரையும் அதில் ஒருவரை தலைவராகவும் நியமித்து, தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்.அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன.

ஆனால், இவ்வளவு நடந்தும் தமிழக நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் தெரியவில்லையா? அப்படி தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுக்காததது ஏன் என த‌மிழக‌ காவல் துறை விளக்க வேண்டும். தமிழகம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கூடாரமாகி வருகிறது என நாம் தொடர்ந்து கூறி வருவது உறுதியாகிறது.

இந் நிலையில், தமிழக அரசு, கோவை கு‌ண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுவித்திருப்பது பயங்கரவாத செயல்களை செய்ய முனைபவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றால் மிகையாகாது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று ஓலமிட்டு கொண்டிருந்தவர்கள் இனியும் அதே பல்லவியை பாடுவார்களா? ஓட்டுக்காக பயங்கரவாதத்தை சமரசம் செய்து கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்தை உணராமல் இருந்தால் பெரும் சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை த‌மிழக‌ அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வே‌ண்டு‌ம். இ‌ந்த நபர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வே‌ண்டு‌ம் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp protest
ShareTweetSendShare
Previous Post

26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு!

Next Post

பிப்.18-ல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies