விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை : பிரதமர் மோடி
Jul 29, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, விவசாயிகளின் நலன்களுக்காக எண்ணற்ற திட்டங்களை  செயல்படுத்தியுள்ளோம். நாடு முழுவதும் 60,000க்கும் மேற்பட்ட அம்ரித் சரோவர்களை அரசாங்கம் கட்டியுள்ளது. இந்த முயற்சி விவசாயிகளுக்குப் பயனளிப்பது மட்டுமல்லாமல் கிராமப்புறப் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும். நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதே எங்கள் குறிக்கோள் என்றார்.

சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது, கால்நடை வளர்ப்பின் நோக்கத்தை அதிகரிப்பது, விலங்குகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமத்தில் மீன் வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதே அரசின் கவனம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

முதன்முறையாக, கால்நடை வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்பாளர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு வசதியை வழங்கியுள்ளோம். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடக்கூடிய நவீன விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக நாம் இருக்கிறோம். எட்டு கோடி மக்கள் இந்தியாவின் பால் துறையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள். நமது பால் துறை ரூ. 10 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. பால் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக பாரதத்தின் நாரி சக்தி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் கிராமங்களில் நடப்பட்ட மரக்கன்று, இன்று பெரிய ஆலமரமாக மாறியுள்ளது. இந்த மரத்தின் கிளைகள் தற்போது நாடு மற்றும் உலகம் முழுவதும் விரிவடைந்துள்ளன.

“சர்கார்’ மற்றும் ‘சேகர்’ ஆகிய இருவரின் அற்புதமான ஒருங்கிணைப்புதான், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக பாரதம் உருவெடுத்துள்ளது. இன்று இந்த சிறு கால்நடை பண்ணையாளர்களின் அமைப்பு பெரிய அளவில் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

GCMMFன் கீழ் உள்ள இந்திய பன்னாட்டு கூட்டுறவு சங்கமான அமுலின் வளர்ச்சியை பிரதமர் பாராட்டினார், இது இந்தியாவின் கால்நடை வளர்ப்பாளர்களின் வலிமையின் அடையாளமாக மாறியுள்ளது என்று கூறினார்.

இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில் பல பிராண்டுகள் உருவாக்கப்பட்டன, ஆனால் அமுல் போன்ற எதுவும் இல்லை. இன்று அமுல் இந்தியாவின் கால்நடை வளர்ப்பாளர்களின் வலிமையின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

அமுல் என்றால் நம்பிக்கை, அமுல் என்றால் வளர்ச்சி, அமுல் என்றால் பொதுமக்களின் பங்கேற்பு, அமுல் என்றால் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், அமுல் என்றால் காலப்போக்கில் நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பது, அமுல் என்றால் தன்னம்பிக்கை இந்தியாவுக்கு உத்வேகம், அமுல் என்றால் பெரிய கனவுகள் என பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி அதிகரித்ததை  பிரதமர் எடுத்துரைத்தார். உலக வளர்ச்சி விகிதமான 2 சதவீதத்திற்கு எதிராக இந்தியாவின் பால் உற்பத்தித் துறை 6 சதவீத வளர்ச்சியில் உள்ளது என்றும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்று மகாத்மா காந்தி வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர், வளர்ந்த இந்தியாவை உருவாக்க, இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அவசியம். முந்தைய அரசாங்கங்கள் கிராமப்புற பொருளாதாரத்தின் தேவைகளை துண்டு துண்டாக பார்த்தன. கிராமத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் முன்னுரிமை அளித்து பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் பொருளாதார சக்தியையும் அதிகரிக்க வேண்டியது அவசியம், எனவே இன்று நமது அரசும் பெண்களின் பொருளாதார சக்தியை அதிகரிக்க அனைத்துத் துறையிலும் செயல்பட்டு வருகிறது.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கிய 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பயனாளிகளில் சுமார் 70 சதவீதம் பேர் சகோதரிகள் மற்றும் மகள்கள் என்று பிரதமர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், மகளிர் சுயஉதவி குழுக்களில் (SHGs) இணைந்த பெண்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: gujaratgujarat cmAhmedabadfarmers welfarePM Modi
ShareTweetSendShare
Previous Post

WPL : தொடக்க விழாவில் ஷாருக்கான் பங்கேற்பு!

Next Post

சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகள் – பத்திரமாக மீட்ட இந்திய இராணுவம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies