கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி
Jun 15, 2026, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர்,  மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு செயல்படுவதாக கூறினார். வளர்ந்த இந்தியாவுக்கு நவீன உள்கட்டமைப்புகள் இருப்பது அவசியம்.

எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் தெலுங்கானா அதிகபட்ச பலனைப் பெற வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக, தெலுங்கானாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு தெலுங்கானா வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை என்றும், மாநில மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளைத் திறக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் ஜன்தன் கணக்குகளைத் திறக்கவும் அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும்  நான் உதவுகிறேன்.

அவர்கள் ஆடம்பர வீடுகளில் வசிக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் பக்கா வீடுகளில் தூங்குவதை நான் உறுதிசெய்கிறேன். அவர்களின் குழந்தைகளை உயர்த்துவதற்காக இந்தியாவின் வளங்களை விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்க நான் பாடுபடுகிறேன். 140 கோடி இந்தியர்கள் எனது குடும்பம் என்றும் மோடி தெரிவித்தார்.

அடிலாபாத்தில்  56,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்ததை  நினைவுகூர்ந்த பிரதமர், சங்கரெட்டி நகரில் சுமார் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளுடன் தொடர்புடையவை என்றும் மோடி தெரிவித்தார்.

Tags: ModiTelanganaHyderabadViksit Bharat"pm modi speech in telegana
ShareTweetSendShare
Previous Post

பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Next Post

திராவிட அரசியல் மக்களின் மனதில் நஞ்சூட்டுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies