கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி
Aug 8, 2026, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர்,  மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு செயல்படுவதாக கூறினார். வளர்ந்த இந்தியாவுக்கு நவீன உள்கட்டமைப்புகள் இருப்பது அவசியம்.

எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் தெலுங்கானா அதிகபட்ச பலனைப் பெற வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக, தெலுங்கானாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு தெலுங்கானா வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை என்றும், மாநில மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளைத் திறக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் ஜன்தன் கணக்குகளைத் திறக்கவும் அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும்  நான் உதவுகிறேன்.

அவர்கள் ஆடம்பர வீடுகளில் வசிக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் பக்கா வீடுகளில் தூங்குவதை நான் உறுதிசெய்கிறேன். அவர்களின் குழந்தைகளை உயர்த்துவதற்காக இந்தியாவின் வளங்களை விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்க நான் பாடுபடுகிறேன். 140 கோடி இந்தியர்கள் எனது குடும்பம் என்றும் மோடி தெரிவித்தார்.

அடிலாபாத்தில்  56,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்ததை  நினைவுகூர்ந்த பிரதமர், சங்கரெட்டி நகரில் சுமார் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளுடன் தொடர்புடையவை என்றும் மோடி தெரிவித்தார்.

Tags: ModiTelanganaHyderabadViksit Bharat"pm modi speech in telegana
Share
Tweet
SendShare
Previous Post

பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி! – அண்ணாமலை விமர்சனம்

Next Post

திராவிட அரசியல் மக்களின் மனதில் நஞ்சூட்டுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies