விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Sep 13, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இதில், உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, கல்வி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் என்.சி.சி-க்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும்.

இது தொடர்பாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கடந்த, 1948-ஆம் ஆண்டு 20 ஆயிரம் மாணவர்களுடன் தேசிய மாணவர் படை தொடங்கப்பட்டது. இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளதால், கூடுதலாக மூன்று லட்சம் மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் என்.சி.சி.,யின் மாணவர்கள் பலம், 20 லட்சமாக அதிகரிக்கும். மேலும், உலகின் பெரிய சீருடை இளைஞர் அமைப்பாகவும் இது மாறும்.  என்.சி.சி.யின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிதாக நான்கு பிரிவு தலைமையகங்கள் அமைக்கப்படும். மேலும், இரண்டு புதிய என்.சி.சி பிரிவுகளும் இதில் சேர்க்கப்படும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் படி, என்.சி.சி விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சம விகிதத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படும்.

அதோடு, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், பயிற்சியாளரர்களாக நியமிக்கப்படுவர்.  இதன் மூலம், தேசத்தை கட்டியெழுப்புவதில், இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Rajnath Singhdefence ministernccthree lakh vacancies
Share
Tweet
SendShare
Previous Post

பூமிக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து : சூரிய புயல் எச்சரிக்கை!

Next Post

சீமானுக்கு கிடைக்காமல் போன கரும்பு விவசாயி சின்னம்! – இதுதான் காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies