விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Apr 29, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இதில், உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, கல்வி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் என்.சி.சி-க்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும்.

இது தொடர்பாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கடந்த, 1948-ஆம் ஆண்டு 20 ஆயிரம் மாணவர்களுடன் தேசிய மாணவர் படை தொடங்கப்பட்டது. இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளதால், கூடுதலாக மூன்று லட்சம் மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் என்.சி.சி.,யின் மாணவர்கள் பலம், 20 லட்சமாக அதிகரிக்கும். மேலும், உலகின் பெரிய சீருடை இளைஞர் அமைப்பாகவும் இது மாறும்.  என்.சி.சி.யின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிதாக நான்கு பிரிவு தலைமையகங்கள் அமைக்கப்படும். மேலும், இரண்டு புதிய என்.சி.சி பிரிவுகளும் இதில் சேர்க்கப்படும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் படி, என்.சி.சி விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சம விகிதத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படும்.

அதோடு, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், பயிற்சியாளரர்களாக நியமிக்கப்படுவர்.  இதன் மூலம், தேசத்தை கட்டியெழுப்புவதில், இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Rajnath Singhdefence ministernccthree lakh vacancies
ShareTweetSendShare
Previous Post

பூமிக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து : சூரிய புயல் எச்சரிக்கை!

Next Post

சீமானுக்கு கிடைக்காமல் போன கரும்பு விவசாயி சின்னம்! – இதுதான் காரணம்?

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies