2024 ஐபிஎல் : தமிழக வீரரை கதாநாயகனாகிய குஜராத் பயிற்சியாளர் நெஹ்ரா!
Jul 29, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : தமிழக வீரரை கதாநாயகனாகிய குஜராத் பயிற்சியாளர் நெஹ்ரா!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இரண்டு சீசனிலும் இறுதிப்போட்டி வரை வந்து அசத்திய குஜராத் அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் தகுதி பெற வேண்டும் என்ற முயற்சியில் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு சீசன்களில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்த நிலையில் தற்போது அவர் மும்பை அணிக்கு சென்று விட்டார். இதன் காரணமாக கில், குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அணியாக இருந்தாலும், அதில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை.

ஆனால் குஜராத் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். இதில் சாய் சுதர்சன் ஏற்கனவே தன்னுடைய திறமையை கடந்த சீசனில் நிரூபித்திருக்கிறார். இதனால் இம்முறை அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதேபோன்று விஜய் சங்கர் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக அணியில் விளங்குவார். மேலும் சுழற் பந்துவீச்சில் சாய் கிஷோர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று வீரர்களை தாண்டி நான்காவதாக ஒரு அதிரடி கிரிக்கெட் வீரர் இருக்கிறார். அவர் தான் ஷாருக்கான் பஞ்சாப் அணியில் இருந்த அவர் தற்போது குஜராத் அணிக்கு மாறியிருக்கிறார்.

அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கக்கூடிய ஷாருக்கான் வைத்து குஜராத் அணி பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது.

இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். ஷாருக்கான் ஒரு அதிரடி வீரர் என்பதால் அவரை இறுதிக்கட்டத்தில் பயன்படுத்த போகிறீர்களா என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஆஷிஷ் நெஹ்ரா ஷாருக்கான் என்ற நடிகரின் பெயரை அவர் வைத்திருக்கிறார். எப்படி ஷாருக்கான் பாலிவுட்டில் முக்கியமான ஒரு நடிகராக இருக்கிறாரோ அதேபோல் எங்கள் அணியில் இருக்கும் ஷாருக்கான் ஒரு முக்கியமான நபராக அணியில் இருப்பார்.

அவரை நாங்கள் ஒரு முக்கிய கதாநாயகனாக பார்க்கிறோம் என்று நெஹ்ரா கூறி இருக்கிறார். நெஹ்ராவின் இந்த கருத்து தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் ஷாருக்கான் தற்போது சுழற் பந்துவீச்சையும் கற்றுக் கொண்டிருக்கிறார். போதிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் ஷாருக்கானுக்கு குஜராத் அணி ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Tags: iplipl 2024
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி கோவை வருகை – போலீசார் முக்கிய அறிவிப்பு!

Next Post

அருணாச்சல பிரதேசம்,சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies