இந்து தெய்வத்தை அவமதித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகக் கலைத் துறைத் தலைவர் பொறுப்பை இழந்தார்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து தெய்வத்தை அவமதித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகக் கலைத் துறைத் தலைவர் பொறுப்பை இழந்தார்!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 03:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் நடத்தியதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நாடக கலை துறை தலைவர் நீக்கப்பட்டுள்ளார்.

புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது.

அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நாடகத்தில் சீதை, ஹனுமன் போன்ற தெய்வங்கள் போல் வேடமிட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்த நாடகத்தில் சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சி வழங்குவதாகவும், ஹனுமானின் கதாபாத்திரத்தை சிதைத்தும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த நாடகத்தில் சீதை ராவணனுடன் நடனமாடுவது போலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.

இதை தொடர்ந்து அக்கல்லூரியின் நாடகக் கலைத் துறைத் தலைவர் டாக்டர் ஷர்வணன் வேலு கலை துறை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்து பல்கலைக்கழகம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் இதுதொடர்பான அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோமயானம் என்ற நாடகத்தை நடத்திய மாணவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், “இந்த நாடகம் எந்த ஒரு மத நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கத்தில் போடப்படவில்லை. அனைத்து சமூக மற்றும் கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவர்கள், அனைவரின் நம்பிக்கைகளையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய மத உணர்வுகளையும் நாங்கள் புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

Tags: Pondicherry University Art Department Head Dismissed For Insulting Hindu Goddess!
Share
Tweet
SendShare
Previous Post

தைவான் பூகம்பம் :  பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

Next Post

5 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் ரத்து : உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies