இந்து தெய்வத்தை அவமதித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகக் கலைத் துறைத் தலைவர் பொறுப்பை இழந்தார்!
Jul 31, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து தெய்வத்தை அவமதித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகக் கலைத் துறைத் தலைவர் பொறுப்பை இழந்தார்!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் நடத்தியதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து நாடக கலை துறை தலைவர் நீக்கப்பட்டுள்ளார்.

புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது.

அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நாடகத்தில் சீதை, ஹனுமன் போன்ற தெய்வங்கள் போல் வேடமிட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்த நாடகத்தில் சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சி வழங்குவதாகவும், ஹனுமானின் கதாபாத்திரத்தை சிதைத்தும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த நாடகத்தில் சீதை ராவணனுடன் நடனமாடுவது போலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.

இதை தொடர்ந்து அக்கல்லூரியின் நாடகக் கலைத் துறைத் தலைவர் டாக்டர் ஷர்வணன் வேலு கலை துறை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்து பல்கலைக்கழகம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் இதுதொடர்பான அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோமயானம் என்ற நாடகத்தை நடத்திய மாணவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், “இந்த நாடகம் எந்த ஒரு மத நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கத்தில் போடப்படவில்லை. அனைத்து சமூக மற்றும் கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவர்கள், அனைவரின் நம்பிக்கைகளையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய மத உணர்வுகளையும் நாங்கள் புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

Tags: Pondicherry University Art Department Head Dismissed For Insulting Hindu Goddess!
ShareTweetSendShare
Previous Post

தைவான் பூகம்பம் :  பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

Next Post

5 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் ரத்து : உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies