திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க  விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும்  விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு வங்க அரசு ஊழல் தலைவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. மிரட்டி பணம் பறிக்கும் தலைவர்களை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அவர்களை பாதுகாப்பதற்காக மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்று அவர் கூறினார்.

பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு மாநிலத்தில் சூழல் நிலவுகிறது. மாநிலத்தில் ஏழைகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது. மத்திய நிதியை ஏழை மக்களை சென்றடைய டிஎம்சி அனுமதிப்பதில்லை.மேற்கு வங்கம் முழுவதும் டிஎம்சியின் சிண்டிகேட் ராஜ்ஜியம் நடந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் தலைவர்களிடம் இருந்து 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறிய மோடி, ஊழல் தலைவர்கள் கொள்ளையடித்த பணம், ஏழை மக்களுக்கு திரும்ப வரும் என்றும் மோடி தெரிவித்தார்.

நான் ஊழலை அகற்ற வேண்டும் என கூறுகிறேன். எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு ஊழல்வாதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை பாதுகாக்க டிஎம்சி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து இண்டி கூட்டணியை அமைத்துள்ளன என்றும் மோடி குறிப்பிட்டார். சந்தேஷ்காலி விவகாரத்தில் தொடர்புடையவர்கள்  தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: PM ModiTMCwest bengalSandeshkhali.mata
Share
Tweet
SendShare
Previous Post

சூரிய கிரகணம் – எந்த ராசி டாப் ?

Next Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது : அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies