திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி
Apr 29, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க  விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும்  விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு வங்க அரசு ஊழல் தலைவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. மிரட்டி பணம் பறிக்கும் தலைவர்களை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. அவர்களை பாதுகாப்பதற்காக மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்று அவர் கூறினார்.

பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு மாநிலத்தில் சூழல் நிலவுகிறது. மாநிலத்தில் ஏழைகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது. மத்திய நிதியை ஏழை மக்களை சென்றடைய டிஎம்சி அனுமதிப்பதில்லை.மேற்கு வங்கம் முழுவதும் டிஎம்சியின் சிண்டிகேட் ராஜ்ஜியம் நடந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் தலைவர்களிடம் இருந்து 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறிய மோடி, ஊழல் தலைவர்கள் கொள்ளையடித்த பணம், ஏழை மக்களுக்கு திரும்ப வரும் என்றும் மோடி தெரிவித்தார்.

நான் ஊழலை அகற்ற வேண்டும் என கூறுகிறேன். எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு ஊழல்வாதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை பாதுகாக்க டிஎம்சி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து இண்டி கூட்டணியை அமைத்துள்ளன என்றும் மோடி குறிப்பிட்டார். சந்தேஷ்காலி விவகாரத்தில் தொடர்புடையவர்கள்  தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

Tags: PM ModiTMCwest bengalSandeshkhali.mata
ShareTweetSendShare
Previous Post

சூரிய கிரகணம் – எந்த ராசி டாப் ?

Next Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கானது : அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சனம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies