மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக, காங்கிரஸ் செய்த 12 லட்சம் கோடி ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடிகரை, வெள்ளமடை, கஸ்தூரிபாளையம், வீரபாண்டி பிரிவு பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2004 – 2014 ஆண்டுகளில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இதே இந்தி கூட்டணி கட்சிகள், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்து, முப்பது கட்சிகள் சேர்ந்து திரு. மன்மோகன் சிங் அவர்களைப் பிரதமராக அறிவித்தன. நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமரான அவரால், திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்த 12 லட்சம் கோடி ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது மீண்டும் அதே போன்ற ஊழல் ஆட்சியைக் கொண்டு வர கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கான ஆட்சியாக அமைந்தது.

கடந்த 2019 தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிவிட்டு, மூன்றாவது முறையாக, வளர்ச்சியை வேகப்படுத்த, உலக அரங்கில் அடுத்த 25 ஆண்டுகளில் முதல் நாடாக நமது நாடு உருவாக அடித்தளம் அமைக்கும் ஆட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது கோவையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி விட்டது. பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தாமல்,கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக, குடி தண்ணீர், பாசனத்துக்குத் தண்ணீர் என அனைத்தும் பற்றாக்குறையாக இருக்கிறது.

இதனைச் சரி செய்ய, நமக்கு, நமது பிரதமரின் திட்டங்களை முழுமையாக, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. நாம், நமது இளைஞர்கள், விளையாட்டில் சாதிக்க, ஒவ்வொரு பஞ்சாயத்து தலைக்கிராமத்திலும், விளையாட்டு மைதானம் கொண்டு வரப் போகிறோம்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், 4,000 கோடி செலவில், கிரிக்கெட் மைதானம் கொண்டு வரப்போகிறாராம். நமது இளைஞர்கள் சாதிக்க வேண்டுமா அல்லது, வெளிநாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டுமா? 4,000 கோடியில், நமது கோவைக்கு நல்ல சாலைகள் அமைக்கலாம். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். ஆனால், திமுகவுக்கு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை.

கோவையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரடிப் பார்வையில் தீர்வு கிடைத்திட, கோவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறந்திட, நமது இளைஞர்கள், தாய்மார்கள் முன்னேற்றம் பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வெற்றியின் சின்னம், மாற்றத்தின் சின்னம், வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கோவையின் முன்னேற்றத்துக்காக, கட்சி வேறுபாடின்றி வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
ShareTweetSendShare
Previous Post

ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கதுறை சோதனை!

Next Post

கோடை விடுமுறை: சென்னை – நாகை இடையே வந்தே பாரத் ரயில் சேவை!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies