தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.7 லட்சம் போலீசார்!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.7 லட்சம் போலீசார்!

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.

தேர்தலில் 1.7 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் 5 நிமிடங்களில் போலீசார் விரைந்து செல்ல முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த முறை பொதுக்கூட்டம், வாகன பேரணி, பேரணி, தெருமுனைக் கூட்டங்கள் என்று பல்வேறு வகையான பிரசாரங்கள் அமைதியான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் பிரசாரம் முடிய 3 நாட்களே உள்ளன. புதன்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் சேர்ந்து 717 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 712 கண்காணிப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் பறக்கும் படையினர் பண விநியோகம், முறைகேடு குறித்து சோதனை நடத்துவார்கள். கண்காணிப்பு குழுவினர் வேட்பாளரின் செலவு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு 1.70 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அதில் 190 மத்திய பாதுகாப்பு படையினரும் பயன்படுத்தப்பட உள்ளனர். குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர்.

தேர்தல் முடிந்த பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்படும்.

Tags: Chief Election Commissioner1.7 lakh police on election security duty in Tamil Nadu!
Share
Tweet
SendShare
Previous Post

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை!

Next Post

2026-யில் புதிய கட்சி – நடிகர் விஷால் அறிவிப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies