ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளுத்து வாங்கிய கனமழை? - காரணம் என்ன?
Jul 23, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளுத்து வாங்கிய கனமழை? – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வழக்கத்திற்கு மாறாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 75 வருடங்களாக இல்லாதஅளவு பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதற்கு, காரணம் என்ன? இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரம் கடற்கடையை ஓட்டி உள்ளது. வறண்ட நிலப்பகுதியான இங்கு 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது ஓராண்டு பெய்யக் கூடிய மழை அளவாகும். கடந்த 75 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை பெய்துள்ளது.

கடந்த 15-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைனில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்த அளவு நிலைமை விபரீதமாகியுள்ளது.

குறிப்பாக, துபாயிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்-ஐன் பகுதியில் 24 மணி நேரத்தில் 256 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. வருடாந்திர மழை அளவைவிட இது 30 சதவீதம் அதிகம் என்கின்றனர். அதாவது, 1949-ல் பெய்த மழையை விட அதிகமாகும்.

மேலும், பெருமழை காரணமாக, துபாயில் இரண்டாவது நாளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 440 விமானங்கள் தாமதமாகியுள்ளது. இதனால், பயணிகள் பல்வேறு விமான நிலையங்களில் முகாமிட்டுள்ளனர்.

துபாய், பக்ரைனில் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாலைகளில் வாகனங்கள் தண்ணரீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாலைவனங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில். ஓட்டகம் உள்ளிட்ட உயினங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் வறண்ட பகுதிகளை கொண்டதால், செயற்கை மழை உருவாக்கப்படுகிறது என்றும், மேக விதைப்பு மூலம் மழையை அதிகப்படுத்தி இருக்கலாம் என்கிறது ஏ.பி செய்தி நிறுவனம். ஆனால், பருவகால மாற்றம் தான் காரணம் என்கின்றனர் அங்குள்ள வல்லுநர்கள். மேலும், எல் நினோ மற்றம் லா நினா போன்றவையே காரணம் என்று வாதாடுபவர்களும் இருக்கின்றனர்.

மேலும், தொடர்ந்து பெட்ரோல், டீசல், நிலக்கரியை எரிப்பதன் மூலம் காலநிலை தொடர்ந்து வெப்பம் அடைந்து மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், மழை வெள்ளத்தால் மக்கள் உயிரிழக்கும் கொடூரம் தொடரும் என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரி கால நிலை அறிவியல் மூத்த விரைவுயாளர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.

ஆய்வுகள் அனைத்தும் மனித தவறுகளே காரணம் என சொல்லாமல் சொல்கிறது. என்ன செய்யப்போகிறது மனிதக் குலம்?

Tags: Heavy rain in the United Arab Emirates? - What is the reason?
ShareTweetSendShare
Previous Post

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்! – போக்குவரத்து காவலரின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்!

Next Post

பாஜகவில் இணைந்த உ.பி.மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர்!

Related News

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies