DEEP FAKE தொழில் நுட்பம் : 75% இந்தியர்கள் பாதிப்பு!
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

DEEP FAKE தொழில் நுட்பம் : 75% இந்தியர்கள் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 28, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

DEEP FAKE எனப்படும் AI தொழில் நுட்பத்தினால் கடந்த ஓராண்டில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். McAfee என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

சமூக வலைத்தளப் பக்கங்களில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் கஜோல் உட்பட பல பாலிவுட் நடிகர்களின் DEEP FAKE வீடியோக்கள் வெளிவந்த பின்னணியில், ஒரு வீடியோ அல்லது ஆடியோவின் நம்பகத்தன்மையை நம்புவதற்கு முன்பு நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று DEEP FAKE பற்றிய தமது கவலையை பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அதோடு அவர் நின்று விடவில்லை. இந்தியாவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் போது, சமூக ஊடகங்களில் டீப்ஃபேக்குகள் தோன்றுவதைப் பற்றி பேசிய பிரதமர் மோடி , “AIக்கான உலகளாவிய விதிமுறைகள் தேவை என்று வலியுறுத்தினார். மேலும் AI தொழில் நுட்பம் மக்களை சென்றடைய வேண்டும் என்றும், அதே சமயம் அது சமூகத்திற்கு பாதுகாப்பாக தான் இருக்க வேண்டும் என்றும் உறுதிப்படுத்தினார்

மேலும் மற்றொரு சந்தர்ப்பத்தில் தான் ‘கர்பா’ நடனமாடுவதைக் காட்டும் ஒரு DEEP FAKE-யை எடுத்துக்காட்டி, “இந்திய சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று டீப்ஃபேக்குகள் என்றும், அவை சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார். AI அதிகரித்து வரும் பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஊடகங்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்த சூழலில் தான் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, UNITED KINGDOM, ஜப்பான், பிரான்ஸ் ஜெர்மனி உட்பட இன்னும் பல உலக நாடுகளில் ஏறத்தாழ 7000 பேர்களிடம் McAfee என்ற மென்பொருள் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 75 சதவீத மக்கள் DEEP FAKE பதிவுகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதில் 30 சதவீத இந்தியர்கள், தங்களால் அது உண்மையா போலியா எனக் கண்டறிய முடிந்தது என்றும் கூறியுள்ளனர்.

DEEP FAKE பதிவுகளை நம்புவதாக 22 சதவீத இந்தியர்கள் தெரிவித்ததாக என இந்த ஆய்வு கூறுகிறது. 38 சதவீத இந்தியர்கள் DEEP FAKE மோசடி மூலம் பெரும் பணத்தை பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்கள்.

64 சதவீதம் பேர் DEEP FAKE மூலம் ஆன்லைனில் நடக்கும் பண மோசடி நடவடிக்கைகளைக் கண்டறிய முடிவதில்லை என்றும் ஆய்வின் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், McAfee ஆய்வறிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி, அமிதாப் பச்சன், அமீர் கான் ,ரன்வீர் சிங், பிரதமர் மோடி, பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைவர் கமல்நாத், பாஜக தலைவர் மனோஜ் திவாரி, பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட DEEP FAKE யை எதிர்கொண்ட பிரபலங்களின் பட்டியல் இன்னும் நீளம்.

சைபர் கிண்டல் ,போலி ஆபாச படங்கள், பண மோசடிகள், பிரபலங்களின் ஆள்மாறாட்டம் , ஊடக நம்பிக்கை திரிபுகள், தேர்தல் செல்வாக்கு சிதைத்தல் அல்லது கூட்டுதல் மற்றும் வரலாற்று சிதைத்தல் என DEEP FAKE, தமது செல்வாக்கைச் செலுத்தி வருகிறது.

இதனால் பில்கேட்ஸ் உடனான பேச்சுவார்த்தையில் , பிரதமர் மோடி, நிர்வாகத்தில் AI ஐ ஒருங்கிணைப்பது, AI சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றியும் விவாதித்ததாக தெரிவித்திருந்தார்.

AI எனும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தை கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது .

 

Tags: McAfeePM ModiAIDeep Fake
ShareTweetSendShare
Previous Post

பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் : மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய போலீசார்!

Next Post

தேனி அருகே பாலம் இன்றி அவதிப்படும் கிராம மக்கள்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies