க்ரைம் தொடர்கள் பார்க்கும் சிறார்களுக்கு மனநல பாதிப்பு ஆய்வறிக்கையில் தகவல்!
Jun 14, 2026, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

க்ரைம் தொடர்கள் பார்க்கும் சிறார்களுக்கு மனநல பாதிப்பு ஆய்வறிக்கையில் தகவல்!

Murugesan M by Murugesan M
May 11, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

c
TV , OTT , YOUTUBE போன்றவற்றில் ஒளிபரப்பாகும் குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்கும் பள்ளி மாணவர்கள் எந்தவிதமான பாதிப்புக்கு ஆளாகின்றனர் ? என்பது பற்றி பார்ப்போம்.

சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், தலைநகர் சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அந்த அறிக்கையில், OTT தளத்தில் துப்பறியும் கதை தொடரின் முதல் பகுதியைப் பார்த்த இளம் பள்ளி மாணவர்கள், குற்றப்பின்னணி உள்ள கதையால் ஈர்க்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட தொடருக்கு அடிமையாகின்றனர். அதன் விளைவாக மாணவர்கள் பெரும் அளவில் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிபிஎஸ்இ, தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் 2033 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 34 சதவீத மாணவர்கள் மனப்பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த நிலையில், 33 சதவீத மாணவர்கள், க்ரைம் தொடர்களைப் பார்த்தபின் பயத்தால் நடுங்குவதாக கூறியுள்ளனர்.

கிராஃபிக் காட்சிகள், ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் வீசுவது போன்ற காட்சிகள்,மற்றும் குரூரமான சித்ரவதை காட்சிகள் என இருக்கும் தொடர்களைப் பார்த்தபிறகு, பயங்கரமான கனவுகள் வந்ததாக பல மாணவர்கள் ஆய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தினசரி 2 மணிநேரம், இந்த மாதிரி க்ரைம் தொடர்கள்-நிகழ்ச்சிகளை டிவியில், OTT யில் , YOUTUBE யில் பார்க்கும் பள்ளிக் குழந்தைகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு, அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதாக இந்த ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களில் ஒருவரான மாரியப்பன், ‘ சிறு குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன் வந்து விட்ட நிலையில் , வயது கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, மொபைல் போனில் குற்றச் சம்பவங்களை மிக எளிதாக குழந்தைகள் பார்க்கின்றனர் என்றும், பெற்றோரின் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தாலேயே இது நடக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

குற்றவாளிகளை ஹீரோவாக காட்டும் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் , மாணவர்களைக் கவர்கின்றன என்று குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்த மாதிரியான குற்றவாளிகள் பற்றி பார்க்கும் மாணவர்களே எளிதில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கோடிட்டு காட்டியுள்ளது .

பெரும்பாலும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், டிவி யூ டியூப்பில் வரும் உள்ளடக்கத்துக்கு இன்னும் சென்சார் வரவில்லை என்றும். TRP யை கூட்டுவதற்காக, OTT தளத்தில் வரும் தொடர்களின் படைப்பாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதீத கற்பனையில் கிராபிக்ஸ்காட்சிகள் மூலம் தத்ரூபமாக க்ரைம் காட்சிகளை வைப்பதால் தான் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ள ஆய்வறிக்கையைப் பார்க்கும் போது நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் நிலவுகிறது.

Tags: Information in the study of mental damage to minors who watch crime series!
ShareTweetSendShare
Previous Post

எப்படி பரவுகிறது ரேபிஸ் நோய்? ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?

Next Post

அன்னையின் தாலாட்டு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies