3-வது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடி : பொதுத்துறை நிறுவன பங்குகள் விலை உயரும் என கணிப்பு!
Apr 29, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடி : பொதுத்துறை நிறுவன பங்குகள் விலை உயரும் என கணிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 2, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் காணக்கூடும் என்றும் CLSA அமைப்பு கணித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேர்தல் முடிவுகளுக்கும் நிறுவனப் பங்குகளின் விலை உயர்வுக்கும் எப்போதுமே ஒரு சம்பந்தம் இருந்து வந்திருக்கிறது.

ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாட்டில் காலத்துக்கேற்ற பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் இடம்பெற்றிருந்தால், அந்த கட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது, பங்கு விலைகள் தானாக உயரும்.

மூன்றாவது முறை பிரதமராகும் போது , இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக்குவேன் என பிரதமர் மோடி உத்திரவாதம் தந்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் பங்குகளின் விலை உயரக் கூடும் என முதலீடுகளுக்கு ஆலோசனைகளை கூறும் CLSA அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதே போல ஆட்சியில் இருக்கும் பதவிக்காலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டங்களை நடைமுறை படுத்தியதாலும், மேலும் தனது அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்ட வரைவை வைத்திருப்பதாலும், இந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் வரும் நாளில், பல நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கத்தை நாட்டை தலைமை தாங்கும் தலைவரின் ஆளுமை தீர்மானிக்கிறது. தலைவர் ஒரு சிறந்த ஆளுமை மற்றும் செல்வாக்கு பெற்றவராக இருந்தால், அவர் தலைமைக்காக நாட்டில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும்.

பிரதமர் மோடியின் தலைமையை உலகமே பாராட்டுகின்ற சூழலில், இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில், இந்திய பங்கு சந்தையில் அரசு துறை நிறுவனங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட மிக சிறப்பாக செயல் பட்டன என்று சுட்டிக் காட்டியிருக்கும் இந்த அறிக்கை, 2024 தேர்தல் முடிவுக்குப் பிறகும், இதே போக்கு தான் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, L&T, NTPC, NHPC, PFC, ONGC, IGL,மற்றும் Mahanagar Gas பங்குகளும்,, வங்கிகளில்,HDFC, ICICI, Axis Bank மற்றும் IndusInd போன்ற வங்கிப் பங்குகளும், அசோக் லேலண்ட், அல்ட்ராடெக், பஜாஜ் ஃபைனான்ஸ், மேக்ஸ் ஃபைனான்சியல்ஸ், ஜொமேட்டோ மற்றும் டிமார்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும், மேலும் தொலைத்தொடர்பு தொடர்பான துறைகளில், பார்தி ஏர்டெல், இண்டஸ் டவர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் விலை அதிகமாகும் வாய்ப்பிருக்கிறது என்று CLSA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிலும் சரி, 2019 ஆண்டிலும் சரி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு பங்குகளின் விலை அதிகமானது. அது போலவே இந்த ஆண்டும் நடக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக அம்பானி, அதானி, டாடா, பங்குகள் விலை உயரும் என்பார்கள். பிரதமர் மோடியின் ஆட்சியில் தொழில் துறை சிறப்பாக செயல் படுவதால், இப்போதெல்லாம், இது பிரதமர் மோடி பங்குகள் என்றே சொல்லப்படுகின்றன.

 

Tags: IndiaModibjpprime ministerpsushare market
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் ஆளுநர் தமிழிசை பிறந்த நாள் : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஐசிசி ஆடவர் டி-20 கிரிக்கெட் போட்டி : டூடுல் வெளியிட்ட கூகுள்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies