தினசரி உணவில் அதிக புரோட்டீன் அமெரிக்காவை முந்திய சீனா!
Jun 22, 2026, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தினசரி உணவில் அதிக புரோட்டீன் அமெரிக்காவை முந்திய சீனா!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் மக்களுக்கு கிடைக்கும் தினசரி உணவுப் புரதத்தின் அளவு, அமெரிக்காவை விட அதிகம் என ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சார்பில், அடிக்கடி உலக நாடுகளில் தனி நபருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளின் அளவு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது.

2010ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 187 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்தந்த நாடுகளின் உணவு உற்பத்தி செய்யும் அளவுகள், நாட்டின் உணவு இருப்பு நிலைகள் மற்றும் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவின் அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ள படுகின்றன.

இந்த ஆய்வின் படி, சீனாவில், ஒரு தனிநபருக்கு தினசரி 124.61 கிராம் புரதம் கிடைக்கிறது. அதே நேரத்தில் வளர்ந்த நாடான அமெரிக்காவில், ஒரு தனி நபருக்கு 124.33 கிராம் புரதமே கிடைக்கிறது. ஜப்பானின் தனிநபர் தினசரி புரத சப்ளை 91.99 கிராம் ஆகவும், தென் கொரியாவில் 108.31 கிராம் ஆகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 113.63 கிராம் ஆகவும் மற்றும் ஆஸ்திரேலியாவில் 119.55 கிராம் ஆகவும் தனிநபருக்கு புரத சத்து கிடைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

உணவு இருப்புநிலைக் குறிப்பின்படி, சீனாவைப் போன்ற மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் 2021ம் ஆண்டில் தனிநபர் தினசரி புரத விநியோகம் 70.52 கிராம் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் முதல் ஐந்து மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகளில், இந்தோனேசியாவில் 79.75 கிராம் ஆகவும், பாகிஸ்தான் 70.77 கிராம் ஆகவும் மற்றும் நைஜீரியா 59.08 கிராம் ஆகவும் என புரத அளவுகளில் பின்தங்கி இருக்கிறது.

ஊட்டச் சத்து அளவுகளில் அமெரிக்காவை எப்படி சீனா முந்தி செல்கிறது என்பதற்கான காரணங்களையும் இந்த ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

சீனா தனது புரத விநியோகத்தை இறக்குமதி மூலம் மட்டுமல்லாமல் தீவிர கால்நடை வளர்ப்பு, அத்துடன் விவசாய மற்றும் மீன்வளர்ப்புகள் மூலம் அதிகரித்துள்ளது. இப்படி சீனாவில் உற்பத்தியாகும் ஊட்டச் சத்து நிறைந்த சில உணவுப் பொருட்கள் உலகிலேயே சிறந்த உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, சீன மக்கள் அமெரிக்கர்களைப் போல அதிக இறைச்சி சாப்பிடாமல் புரத சத்துக்களை தாவரங்களில் இருந்தே அதிகம் பெறுகிறார்கள் என்றும் ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் கோதுமை, ஓட்ஸ், அரிசி, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் மூலம் 60.5 சதவிகிதம் என சீனாவின் புரத விநியோகத்தில் அதிகமான தாவரங்களே இடம் பெற்றுள்ளன. .

2021ம் ஆண்டில், சீனாவின் புரத விநியோகத்தில் சுமார் 60.5 சதவீதம் காய்கறிகளின் மூலமே பெறப் பட்டுள்ளது. அதே ஆண்டு அமெரிக்காவில் காய்கறியிலிருந்து 31 சதவீதமே புரத சத்து பெறப் பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகிய இரண்டின் மூலமாகவும் புரதம் கிடைப்பதை அதிகரிப்பதில் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

Tags: China overtakes the United States in daily food protein!
ShareTweetSendShare
Previous Post

ஏமன் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Next Post

ஆடி பௌர்ணமி – சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies