நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் வக்ஃபு வாரிய மசோதா!
Jun 23, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் வக்ஃபு வாரிய மசோதா!

Murugesan M by Murugesan M
Aug 8, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு வாரிய மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து, அம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சம்மதம் தெரிவித்தார்.

வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.

இந்த விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், இந்துக்களாகிய தாங்கள், பிற மதத்தை மதிப்பதாகவும், மத சுதந்திரத்தின் மீது வக்ஃபு வாரிய மசோதா நேரடி தாக்குதல் நடத்துவதாவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30 மீதான நேரடி தாக்குதல்தான் இந்த சட்டமசோதா என்று குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், வக்ஃபு வாரியத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், இதை கோயிலுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சியினர் திசைதிருப்புவதாகவும் குறிப்பிட்டார்.

விவாதத்தின் மீது பேசிய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், இதே நிலை நீடித்தால் மக்களவைத் தலைவரின் உரிமை கூட நாளைக்கு பறிபோகலாம் என்றும், அவருக்கும் சேர்த்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுப்பதாகவும் கூறினார். அகிலேஷ் யாதவுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, சமரசத்தைப் பற்றி பேசும் அகிலேஷ் யாதவால், மக்களவைத் தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சச்சார் கமிட்டி பரிந்துரையின்பேரில் தான் வக்ஃபு வாரிய மசோதா கொண்டு வரப்பட்டதாகவும், இதற்கு தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய எம்.பி.க்களே ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பிவைக்க அவர் சம்மதம் தெரிவித்தார்.

முன்னதாக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.பி.க்கள் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

Tags: Wakfu Board Bill under consideration by the Parliamentary Joint Committee!
ShareTweetSendShare
Previous Post

சட்டம் – ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி ஆய்வு!

Next Post

வீடுபுகுந்து மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies