வெள்ளிப்பதக்கம் + விசா! : தங்க மகனால் கிடைத்த பலன்!
Jun 23, 2026, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளிப்பதக்கம் + விசா! : தங்க மகனால் கிடைத்த பலன்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றதை கொண்டாடும் வகையில் இன்று ஒருநாள் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்கப்படும் என அமெரிக்க விசா விண்ணப்பத் தளமான ‘அட்லிஸ்’ அறிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்னும் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92 புள்ளி 97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கத்தையும் தட்டிச்சென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89 புள்ளி 45 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார்.

2020-ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா இம்முறையும் முதலிடத்துக்காக கடுமையாக போராடினார். எனினும் வெள்ளி பதக்கமே கிடைத்தது.

இதற்கிடையே நீரஜ் சேப்ரா தங்கப்பதக்கம் வென்றால் இந்தியர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என அமெரிக்க விசா விண்ணப்பத் தளமான ‘அட்லிஸ்’ அறிவித்திருந்தது. இந்தியர்கள் எந்த நாட்டுக்குச் செல்ல விரும்பினாலும் இலவசமாக விசா வழங்கப்படும் என ‘அட்லிஸ்’ விசா விண்ணப்பத் தளத்தின் நிறுவனரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மொஹக் நஹ்தா தெரிவித்திருந்தார்.

இருப்பினும் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கும் நீரஜின் கடுமையான உழைப்புக்கும் பலனில்லாமல் போனது. இதுகுறித்து தமது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மொஹக் நஹ்தா, பதக்கத்தின் நிறம் முக்கியமல்ல என்றும், நீரஜ்ஜின் சாதனையை கொண்டாடடும் வகையிலும் தாம் முன்பே உறுதி அளித்தபடியும் இந்தியர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இன்று (9.8.24) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இலவசமாக விசா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தோடு இலவச விசாவையும் இந்தியர்களுக்கு பெற்று தந்திருக்கிறார் தங்க மகன் நீரஜ் சோப்ரா.

Tags: Silver Medal + Visa! : The benefit of a golden son!
ShareTweetSendShare
Previous Post

தொலைபேசியில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Next Post

இனி ஷாக் அடிக்காது! : பிரதமரின் சூரிய இலவச மின் திட்டத்தில் சேர ஆர்வம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies