அருணாச்சல பிரதேச ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்த ஆய்வு தொடக்கம்!
Aug 1, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேச ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்த ஆய்வு தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 01:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சல பிரதேசத்தில் ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்து இந்தியா முதன்முதலாக ஆய்வு மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் 1,080 கிலோமீட்டர் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில், அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் உள்ளன.

இது குறித்து இதுவரை எந்த ஆய்வுகளோ கணக்கெடுப்புக்களோ நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்தியா முதன்முறையாக இந்த ஏரிகள் குறித்து விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைமையிலான தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (GLOF) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மற்றும் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்களில், சீன எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகளில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தைத் தணிப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த பனிப்பாறை ஏரிகளை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

அருணாச்சல பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய மலையேறுதல் நிறுவனத்தின் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து கணக்கெடுப்பை நடத்துகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் திபாங் ஆகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளும் தெற்கு திபெத்தின் எல்லையில் அமைந்திருக்கின்றன.

ஆனால், இந்த தெற்கு திபெத் பகுதிகளைச் சீனா உரிமை கொண்டாடுகிறது. எனவே இந்தியாவின் இந்த கணக்கெடுப்பு புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

யார்லுங் சாங்போ ஆற்றில், சீனா ஒரு பெரிய அணை கட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த அணை உடையக்கூடிய அபாயத்தில் உள்ளது.

2018ம் ஆண்டில் திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், வெள்ளத்துக்கும் சீனாவின் இந்த அணை கட்டுமானம் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள அடிவாரப் பகுதிகளில் சீன உள்கட்டமைப்பு திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது

இந்தச் சூழலில், அருணாச்சல பிரதேசத்தின் 27 மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அதில் தவாங் மற்றும் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள தலா மூன்று அதிக ஆபத்துள்ள பனிப்பாறை ஏரிகளை முதலில் இந்தியா ஆய்வு செய்ய உள்ளது.

14 பேர் கொண்ட நிபுணர் குழுவின் ஆரம்பப் பணிகள் 12 நாட்களுக்குள் முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த பனிப் பாறை ஏரிகள் ஆய்வு சீனாவின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பது உண்மை.

Tags: Arunachal pradeshdangerous glacier-fed lakessurvey of dangerous glacier-fed lakes
ShareTweetSendShare
Previous Post

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்த சொகுசு கார்!

Next Post

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : அமெரிக்க அதிபர் பாராட்டு!

Related News

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 600 பேருக்கு விருது – முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுப்பினர்கள் காக்க வேண்டும் – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies