அருணாச்சல பிரதேச ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்த ஆய்வு தொடக்கம்!
Aug 20, 2025, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேச ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்த ஆய்வு தொடக்கம்!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 01:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சல பிரதேசத்தில் ஆபத்தான பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் குறித்து இந்தியா முதன்முதலாக ஆய்வு மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் 1,080 கிலோமீட்டர் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில், அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் உள்ளன.

இது குறித்து இதுவரை எந்த ஆய்வுகளோ கணக்கெடுப்புக்களோ நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்தியா முதன்முறையாக இந்த ஏரிகள் குறித்து விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைமையிலான தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (GLOF) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மற்றும் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்களில், சீன எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகளில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தைத் தணிப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த பனிப்பாறை ஏரிகளை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

அருணாச்சல பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய மலையேறுதல் நிறுவனத்தின் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து கணக்கெடுப்பை நடத்துகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் திபாங் ஆகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளும் தெற்கு திபெத்தின் எல்லையில் அமைந்திருக்கின்றன.

ஆனால், இந்த தெற்கு திபெத் பகுதிகளைச் சீனா உரிமை கொண்டாடுகிறது. எனவே இந்தியாவின் இந்த கணக்கெடுப்பு புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

யார்லுங் சாங்போ ஆற்றில், சீனா ஒரு பெரிய அணை கட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த அணை உடையக்கூடிய அபாயத்தில் உள்ளது.

2018ம் ஆண்டில் திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும், வெள்ளத்துக்கும் சீனாவின் இந்த அணை கட்டுமானம் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள அடிவாரப் பகுதிகளில் சீன உள்கட்டமைப்பு திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது

இந்தச் சூழலில், அருணாச்சல பிரதேசத்தின் 27 மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அதில் தவாங் மற்றும் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள தலா மூன்று அதிக ஆபத்துள்ள பனிப்பாறை ஏரிகளை முதலில் இந்தியா ஆய்வு செய்ய உள்ளது.

14 பேர் கொண்ட நிபுணர் குழுவின் ஆரம்பப் பணிகள் 12 நாட்களுக்குள் முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த பனிப் பாறை ஏரிகள் ஆய்வு சீனாவின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது என்பது உண்மை.

Tags: Arunachal pradeshdangerous glacier-fed lakessurvey of dangerous glacier-fed lakes
ShareTweetSendShare
Previous Post

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்த சொகுசு கார்!

Next Post

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : அமெரிக்க அதிபர் பாராட்டு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies