விண்வெளி பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள்!
Jun 10, 2026, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளி பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்வெளிப் பயணத்தில் சாதனை புரிந்து ஹீரோக்களாக திரும்பி வந்தவர்களும் உண்டு. எதிர்பாராத சூழலால் ஒரு சிலர் தங்கள் உயிரையே அறிவியல் ஆராய்ச்சிக்கு விலையாக கொடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து உயிருடன் பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை.

1960ம் ஆண்டிலிருந்து விண்வெளி ஆய்வின் வரலாறு தொடங்குகிறது. எண்ணற்ற விண்வெளி வீரர்கள் தங்கள் விலை மதிப்பில்லாத உயிரைப் பணயம் வைத்து, அறிவியல் வளர்ச்சிக்காக விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை  676 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்களில், 20 பேர் விண்ணிலேயே இறந்துள்ளனர். இது விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட மொத்த வீரர்களில் 2.8 சதவீதமாகும்.

1967ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, விண்வெளிப் பயணத்துக்கு முந்தைய சோதனையின் போதே விண்வெளி ஓடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விண்வெளியில் பறந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரரான கஸ் கிரிஸ்ஸம், விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரரான எட்வர்ட் எச். வைட் மற்றும் ரோஜர் பி. சாஃபி ஆகிய 3 விண்வெளி வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1967ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, சோயுஸ் 1 விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் கோமரோவ் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக மீண்டும் பூமிக்குள் நுழையும் போது, ​​பாராசூட் அமைப்பு தோல்வியடைந்தது. இதனால், விளாடிமிர் கோமரோவ் விண்வெளி பயணத்தின் போது இறந்த முதல் விண்வெளி வீரர் ஆனார்.

அடுத்ததாக, 1971ம் ஆண்டு சோயுஸ் 11 மூலம் , உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யுட் 1 லிருந்து விண்வெளி வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். தரையிறங்குவதற்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக விண்கலத்தில் இருந்த 3 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். இதுவே விண்வெளியில் இருக்கும் போது விண்வெளி வீரர்கள் இறந்த முதல் சம்பவமாகும்.

1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி அன்று காலை 11:38 மணிக்கு அமெரிக்க விண்வெளி ஓடமான சேலஞ்சர் விண்ணில் செலுத்தப் பட்டது. செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சரியாக 73 வினாடிகளில் வெடித்து சிதறியது. இந்த மிக மோசமான விபத்தில், விண்வெளிக்கு சென்ற முதல் குடிமகனான ஆசிரியை கிறிஸ்டா மெக்அலிஃப் உட்பட 7 விண்வெளி வீரர்கள் மரணமடைந்தனர்.

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற்றவர். 2003ம் ஆண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி, ‘கொலம்பியா’ என்ற விண்வெளி ஓடம் 15 நாட்கள் விண்வெளியில் பயணித்து, பூமிக்குத் திரும்பியது. கொலம்பியா விண்வெளி ஓடம் பழுதான காரணத்தால், அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா, இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரர் உட்பட 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த ஜூன் 6ம் தேதி, போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

இதனால் எட்டுநாள் பணிக்காக விண்வெளிக்குச் சென்றவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் செலவிட வேண்டிய ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags: space travelscientific researchspace shuttleEdward H. WhiteRoger B. Safi
ShareTweetSendShare
Previous Post

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

Related News

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

சென்னை துறைமுகத்தில் இருந்து நச்சு வாயு கசிந்த விவகாரம்; தமிழக அரசுக்கு உத்தரவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி

பழனி முருகன் கோவில் நிர்வாகம்; அமைச்சர் சாடல்

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் பழனி ரயில் நிலையம் : வீடியோ வெளியிட்டது தெற்கு ரயில்வே!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies