ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தாரா - பங்குகளை வாங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
Jul 29, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தாரா – பங்குகளை வாங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாடாவின் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைப்பு பேச்சுவார்த்தை 18 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசிடமிருந்து இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த முதலீட்டின் மூலம், இந்திய விமான நிறுவனம் ஒன்றில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பங்குகளை வாங்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாறுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமம், அரசின் ஏர் இந்தியா குழுமத்தைக் வாங்கி, JRD டாடா காலத்திற்கு பின்பு மீண்டும் விமான சேவைத்துறையில் இறங்கியது.

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஆசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இந்த நான்கு விமான நிறுவனங்களையும் டாடா குழுமம் இயக்கி வந்தது.

ஒரு கட்டத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர்ஆசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, குறைந்த விலை விமான சேவையை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது.

அதே சமயம், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகியவை இணைந்து முழு சேவை நிறுவனமாக இயங்கி வந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறது. அதேசமயம் டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கிறது.

தற்போது மத்திய அரசின் முதலீட்டு அனுமதி கிடைத்துள்ள நிலையில், ஏர் இந்தியாவின் 25.1 சதவீத பங்குகளை 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த இணைப்பு முடிந்த பிறகு 675.42 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் பயணச் சந்தைகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் காலூன்றுகிறது. மேலும் சிறிய உள்நாட்டு சந்தைக்கு அப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தன சிறகை விரிக்கிறது என்கிறார்கள் வணிக வல்லுநர்கள்.

கடந்த நிதியாண்டில் சுமார் 15,532 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த டாடா விமான போக்குவரத்து துறை, அதிகமான லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏர் இந்தியாவுடன் இணைந்ததை அடுத்து, அனைத்து விஸ்தாரா விமானங்களும் ஏர் இந்தியாவால் இயக்கப்பட உள்ளன. மேலும், தனது கடைசி விமானத்தை விஸ்தாரா வரும் நவம்பர் 11 ஆம் தேதி இயக்கும் என்றும் தெரிகிறது.

எனவே நவம்பர் 12 ஆம் தேதிக்கு பிறகு  பயண முன்பதிவுகளை வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல், வாடிக்கையாளர்கள் விஸ்தாராவில் செய்ய முடியாது என்றும், விமானங்கள் இயக்கப்படும் வழிகளுக்கான முன்பதிவுகள் ஏர் இந்தியாவின் இணையதளத்திற்கு திருப்பி விடப்படும் என்றும் விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

விஸ்தாராவும் ஏர் இந்தியாவும் சீரான, தொந்தரவில்லாத விமானச் சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக விஸ்தாராவின் தலைமை செயல் அதிகாரி வினோத் கண்ணன் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் கூடுதல் விமான விருப்பங்களை நிறைவேற்ற காத்திருப்பதாகவும், உலகத் தரம் வாய்ந்த, பயண அனுபவத்தை வழங்க இருப்பதாக ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் உறுதியளித்திருக்கிறார்.

இதற்கிடையே, மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் கருடா ஏர்லைன்ஸ் உடன் கூட்டு ஒப்பந்தங்களை முடித்துள்ள ஏர் இந்தியா, ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Tags: Air India GroupVistarasingapore airlinesTata's Air India
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Next Post

கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – கார்த்தி சிதம்பரம் எம்.பி கடிதம்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies