மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் - புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!
Jul 2, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் – புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

திருநெல்வேலி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சின்ன மயிலாறு கிராமம். பாபநாசம் அணையின் அடிவாரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

சின்ன மயிலாறு கிராமத்தை சேர்ந்த மக்கள், மலைப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வழியில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த
ஆற்றை கடந்து செல்ல முறையான பாலங்கள் எதுவும் இதுவரை அமைத்து தரப்படவில்லை. சாதாரண மரப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாலமும் கூட அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டது.

கடுமையான மழை, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், இந்த மரப்பாலத்தை பயன்படுத்திதான் சின்ன மயிலாறு கிராம மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர். ஆனால், மரப்பாலம் 40 ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. இனியும் இந்த மாரப்பாலத்தை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்காது என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

சின்ன மயிலாறு கிராம மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல ஏதுவாக ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் ஆற்றின் குறுக்கே, கான்கிரிட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மழைக்காலம் தொடங்குவதற்குள் கான்கிரீட் பாலத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மலைக் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அச்சமின்றி ஆற்றை கடக்க கான்கிரீட் பாலம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்…..

Tags: Nellaitamiraparani riverwooden bridge to cross riverMylaru village
ShareTweetSendShare
Previous Post

ஈரான் Vs இஸ்ரேல் போர் மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? சிறப்பு கட்டுரை!

Next Post

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் – அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Related News

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies