வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!
Aug 1, 2026, 12:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேம்பட்டு, உலகின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியா மாறியிருப்பதை தற்போது அனைவரும் உணர்வதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சாஸ்திர பூஜையில் ஈடுபட்டார். இதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் ஒரு பாடம் என தெரிவித்தார். வங்கதேசத்தில் கொடுங்கோல் அடிப்படைவாத இயல்பு உள்ளது என்றும், இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரின் தலைக்கு மேல் ஆபத்தின் வாள் தொங்குகிறது என்றும் கூறினார்.

சகிப்பின்மை இந்தியாவுக்கு எதிரானது என்றும், அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.  பன்முகத்தன்மை ஒரு நல்லொழுக்கம் என்றும், அதை ஒரு பிரிவாக பார்க்கக்கூடாது என்றும் கூறினார்.  தர்மம்தான் இந்தியாவின் வாழ்க்கை மற்றும் நமது உத்வேகம் என்று கூறினார்.

“சூழ்நிலைகள் சில நேரங்களில் சவாலாகவும், சில சமயங்களில் நல்லதாகவும் இருக்கும். மனித வாழ்க்கை முன்பை விட பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் இந்த மகிழ்ச்சியான மற்றும் வளர்ந்த மனித சமுதாயத்தில், பல போராட்டங்கள் தொடர்வதை காண்கிறோம். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

அண்டை நாடுகளில், குறிப்பாக வங்கதேசத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பகவத் எச்சரித்தார்.

வங்க தேசத்தில் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், வேகமாக வளரத் தொடங்கும் எந்த தேசமும் கீழே இழுக்கப்படுவது ஒரு சடங்காகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க முயற்சி நடைபெறும் என்றும், இதற்கு உதாரணம் நமது அண்டை நாடான வங்கதேசம் என்றும் அவர் கூறினார்.

Tags: HindusVijayadashami celebrationIndiaRSSmohan bagavatBangladeshNagpur
ShareTweetSendShare
Previous Post

விஜயதசமி கொண்டாட்டம் – கோவை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் விழா!

Next Post

ஜூஸ் கடை TO சூதாட்டம், கோடிகளை சுருட்டிய ‘மகாதேவ்’ துபாயில் சிக்கியது எப்படி? சிறப்பு கட்டுரை!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies