100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் - அண்ணாமலை வாழ்த்து!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் – அண்ணாமலை வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதத்தின் பல தலைமுறைகள் செழிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு துணையிருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேச ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, அனைத்துத் தரப்பு மக்களும் சரிசமம் என்ற சமத்துவ சமுதாயம் என உயரிய கொள்கைகளுடன் இயங்கி வரும் ஆர்எஎஸ்எஸ் இயக்கம்
, விஜயதசமி தினமான இன்று, நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

கடந்த 1925 ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்ட பேரியக்கம், இத்தனை ஆண்டுகளாகத் தேச நலனுக்காகவும், நாட்டு மக்கள் நல்வாழ்வுக்காகவும், தொடர்ந்து தளர்வின்றி இயங்கி வருவது, தன்னலமின்றி உழைக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நாட்டிற்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்பதாகும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதில் பங்கேற்றது மட்டுமின்றி, அதற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர்.

இயக்கத்தின் நிறுவனரான அமரர் டாக்டர். ஹெட்கேவார், தேச விடுதலைக்கான போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர். சுதேசி இயக்கத்திலும், காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பங்கு முக்கியமானது.

இந்த நூறு ஆண்டுகளாக, இயற்கை சீற்றங்கள், அவசரக்காலங்கள், விபத்துக்கள் எனப் பொதுமக்களுக்காக உடனே களமிறங்கிச் செயல்பட்டு வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி, பொதுமக்கள் சேவையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவதால்தான், இன்றும் ஒரு பேரியக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் பொருள், அனைவரும் சமம் என்று அறிவுப்பூர்வமாக ஏற்பது மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாக அதனை ஏற்பதாகும். சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்து, நமது அன்றாட வாழ்க்கையில் சமூகநீதி பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்ய ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது.

விளிம்புநிலையில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த சமுதாயமும் செயல்பட வேண்டும் என்பதையே ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வலியுறுத்துகிறது. நூறாவது ஆண்டிலும், இன்னும் இளமையோடும், துடிப்போடும், நாட்டு நலனுக்காகவும், பொதுமக்கள் ஒற்றுமைக்காகவும், தன்னலமின்றிச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்.பேரியக்கம், மேலும் பல பல நூற்றாண்டுகள் சீரிய முறையில் தொடர்ந்து இயங்க வேண்டும்.

பாரதத்தின் பல தலைமுறைகள் செழிக்கத் துணையிருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalai greetingsrss Foundation DayRSS100
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?

Next Post

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies