சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!
Sep 13, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை தி.நகரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசி மதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோருக்கு நினைவு பரிசும், தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. அதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கபட்டன.

முன்னதாக  பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், Kelo இந்தியா திட்டம் மூலமாக பல விளையாட்டுகளில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள திறமையான மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம் என்று கூறினார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையான பாஜக ஆட்சி இந்தியாவை வல்லரசாக்கும் செயலின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர், சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டிற்காக பிரதமர் மோடி ஒயாமல் உழைக்கிறார் என தெரிவித்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற வாக்கியத்தை ஐ நா சபையில் பிரதமர் மோடி சொல்லி தமிழிற்கு பெருமை சேர்த்தார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக  பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் நமது நாட்டின் விசேஷ தன்மையான யோகா தினம் கொண்டாடப்பட்டது என தெரிவித்தார். மேலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தவர் பிரதமர் மோடி என பெருமிதம் கூறினார்.

தொடர்ந்து பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோடிக்கணக்கான ஏழை மக்களை ஏழ்மையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளதாக கூறினார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஐநா சபைக்கு சென்றாலும், அயோத்திக்கு சென்றாலும் தமிழை நேசித்து வணங்க கூடியவர் பிரதமர் மோடி என பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாகபேசிய தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி எழுதிய Exam Warrior என்ற புத்தகத்தை மாணவர்கள் படித்தால், தேர்வுகள் மீதான பயம் போகும் என்றும், மன் கி பாத் மூலம் மாணவர்களிடையே பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் கூறினார்.

Tags: L MuruganPrime Minister Modi birthday celebrationamo Educational and Charitable Foundationaharashtra Governor CP Radhakrishnan
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு – திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!

Next Post

கவரப்பேட்டை ரயில் பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies