சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!
Jul 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை தி.நகரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசி மதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோருக்கு நினைவு பரிசும், தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. அதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கபட்டன.

முன்னதாக  பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், Kelo இந்தியா திட்டம் மூலமாக பல விளையாட்டுகளில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள திறமையான மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணம் என்று கூறினார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையான பாஜக ஆட்சி இந்தியாவை வல்லரசாக்கும் செயலின் முன்னெடுப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர், சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டிற்காக பிரதமர் மோடி ஒயாமல் உழைக்கிறார் என தெரிவித்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற வாக்கியத்தை ஐ நா சபையில் பிரதமர் மோடி சொல்லி தமிழிற்கு பெருமை சேர்த்தார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக  பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் நமது நாட்டின் விசேஷ தன்மையான யோகா தினம் கொண்டாடப்பட்டது என தெரிவித்தார். மேலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தவர் பிரதமர் மோடி என பெருமிதம் கூறினார்.

தொடர்ந்து பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோடிக்கணக்கான ஏழை மக்களை ஏழ்மையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளதாக கூறினார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஐநா சபைக்கு சென்றாலும், அயோத்திக்கு சென்றாலும் தமிழை நேசித்து வணங்க கூடியவர் பிரதமர் மோடி என பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாகபேசிய தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களையும் தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி எழுதிய Exam Warrior என்ற புத்தகத்தை மாணவர்கள் படித்தால், தேர்வுகள் மீதான பயம் போகும் என்றும், மன் கி பாத் மூலம் மாணவர்களிடையே பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் கூறினார்.

Tags: L MuruganPrime Minister Modi birthday celebrationamo Educational and Charitable Foundationaharashtra Governor CP Radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு – திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!

Next Post

கவரப்பேட்டை ரயில் பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies