இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது! - தயாநிதி
Aug 26, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது! – தயாநிதி

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் தரப்பில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதிமாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என குறிப்பிட்டு தயாநிதிமாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்னும் புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டுவிட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: EPS application should not be accepted! - Provident fund
Share
Tweet
SendShare
Previous Post

விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! : சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies