ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை - வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
Aug 1, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை – வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Nov 21, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

உச்சப்புள்ளி அடுத்த பெருங்குளம் பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் அரண்மனை இளங்கோவடிகள் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

கனமழையால் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கராட்சி அலுவலகம் எதிரே உள்ள இளங்கோவடிகள் தெருவில் முருகானந்தம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் கனமழையால் மாவட்ட போக்குவரத்து கழக பணிமனைக்குள் இருந்த இரு பெரிய மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்படாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. அதேபோல, தொடர் கனமழை காரணமாக குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தையை நடத்த முடியாமல் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறி மூட்டைகளை, சரக்கு வாகனங்களில் இருந்து இறக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Tags: rain warningmetrological centerramanathapuram heavy raintamilnadu rainheavy rainrain alertweather updatelow pressure
ShareTweetSendShare
Previous Post

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி – கோப்பையை கைப்பற்றி இந்தியா அசத்தல்!

Next Post

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies