தோல்வி பயத்தில் திமுக : தேர்தல் வியூக அமைப்புடன் கைகோர்ப்பு - சிறப்பு கட்டுரை!
Jun 7, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி பயத்தில் திமுக : தேர்தல் வியூக அமைப்புடன் கைகோர்ப்பு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது மீது நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் வியூக அமைப்புடன் திமுக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த நிறுவனத்துடன் திமுக மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழகத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும், கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜகவும் தங்களின் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தவறியதும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பால் விலை, மின்சாரக் கட்டணம், தொழில்வரி, சாலைவரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்து விதமான வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்திய திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் பல்வேறு ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பலையாலும், தோல்வி பயத்தாலும் மீண்டும் தேர்தல் வியூகம் அமைப்பை ஆளும் திமுக அரசு, நாடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் அமைப்பிற்கு பலநூறு கோடிகளை கொடுத்து தேர்தல் வியூகங்கள் மூலம் ஆட்சியமைத்த திமுக, அதன் பின்னர், சபரீசனின் நிறுவனமாக கூறப்படும் பென் அமைப்பை முன்னிறுத்தி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது.

ஆனால் தமிழகம் முழுவதும் தேர்தல் வியூகம் அமைக்கும் அளவிற்கு பென் நிறுவனத்தின் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் ராபின் சர்மாவின் SHOW TIME CONSULTANCY நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021ம் ஆண்டு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட திமுக, தற்போது அதே பிரசாந்த் கிஷோரின் ஆதரவுடன் இயங்கிவரும் SHOW TIME CONSULTANCY நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவின் அபரிவிதமான வளர்ச்சிக்கும் இதே ராபின் சர்மாவின் SHOW TIME CONSULTANCY நிறுவனமே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை, பாஜக முந்தி வருகிறது. அதிலும் அண்ணாமலை தலைமை பொறுப்புக்கு வந்தபின்னர் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதோடு, வலுவான கூட்டணியும் அமைந்திருக்கிறது.

பாஜகவின் வலுவான கூட்டணி, மக்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை ஆகிய இரண்டும் தோல்வியை ஏற்படுத்திவிடும் என்ற பயத்திலேயே தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே தேர்தல் வியூகம் அமைக்க திமுக ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: DMKstalinaiadmkudayanithi stalinPrashant Kishor's I-PACSHOW TIME CONSULTANCYTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

ரூ.400 கோடிக்கு காலண்டர் வர்த்தகம் – சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Next Post

மரண பிடியில் கேரள நர்ஸ் – ரத்தப்பணம் மூலம் காப்பாற்ற முயற்சி – சிறப்பு தொகுப்பு!

Related News

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு!

கனடாவின் ஆல்பர்ட்டா – பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!

ராஜஸ்தான் : மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கிய விமானப்படை!

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் பலூன் கண்காட்சி!

திண்டுக்கல் : நுழைவு சீட்டு வாங்குவதில் வனத்துறையினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு!

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies