சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!
Jul 6, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்களுக்கான பாதுகாப்பிற்காக 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 1800 போலீஸார் சபரிமலை சன்னிதானத்திலும், 800 போலீஸார் பம்பையிலும், 700 போலீஸார் நிலக்கல்லிலும், 1050 பேர் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், 650 பேர் கோட்டயத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காவல்துறையினரால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே மகர ஜோதியை தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகரஜோதிக்காக சபரிமலை நோக்கி திருவாபரண பெட்டி புறப்பட்டது. ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கத்துடன் ஆபரணங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

14 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு ஆபரணங்கள் சபரிமலை வந்தடையும் நிலையில் மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்பின் சில வினாடி நேரங்களில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: protection of devoteessabarimala hillsmakarajyothisabarimala tantrisabarimala temple makara jyothisabarimala temple to opensabarimala tragedySabarimalaisabarimala festivalsabarimalasabarimalai magarajothisabarimala templejyothikkorunghi sabarimalasabarimala newsmakarajyothySabarimala devoteessabarimala roads#sabarimala updatesabarimala reportsabarimala makara jyothidevotees throng sabarimala
ShareTweetSendShare
Previous Post

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர ரோகித் சர்மா விருப்பம்!

Next Post

மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

Related News

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

அமெரிக்கா 250-வது சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்பு!

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் – உதயநிதிக்கு அகில பாரத இந்து மகா சபா கண்டனம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்நினோ எதிரொலி : ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை, விவசாயம் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies