சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!
May 11, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்களுக்கான பாதுகாப்பிற்காக 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 1800 போலீஸார் சபரிமலை சன்னிதானத்திலும், 800 போலீஸார் பம்பையிலும், 700 போலீஸார் நிலக்கல்லிலும், 1050 பேர் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், 650 பேர் கோட்டயத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காவல்துறையினரால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே மகர ஜோதியை தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகரஜோதிக்காக சபரிமலை நோக்கி திருவாபரண பெட்டி புறப்பட்டது. ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கத்துடன் ஆபரணங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

14 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு ஆபரணங்கள் சபரிமலை வந்தடையும் நிலையில் மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்பின் சில வினாடி நேரங்களில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sabarimalai magarajothisabarimala templejyothikkorunghi sabarimalasabarimala newsmakarajyothySabarimala devoteessabarimala roads#sabarimala updatesabarimala reportsabarimala makara jyothidevotees throng sabarimalaprotection of devoteessabarimala hillsmakarajyothisabarimala tantrisabarimala temple makara jyothisabarimala temple to opensabarimala tragedySabarimalaisabarimala festivalsabarimala
ShareTweetSendShare
Previous Post

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர ரோகித் சர்மா விருப்பம்!

Next Post

மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

Related News

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies